"சார் அந்த பொண்ணுக்கு முகமே சிதைஞ்சு போச்சு… அது உயிரோட இருக்கணும்னா…" என்று ஆரம்பித்து அனைத்தையும் சொல்லி முடித்தார்…
அதை கேட்ட சத்யன் பதறினான்.
"இதுக்காக மீராவை கொன்னுட்டீங்களாடா…?"
"ஆங்… அதெல்லாம் இல்லை. அவள் ஏற்கனவே செத்து போயிட்டாளா.. அப்புறம்தான் முகமாற்று சிகிச்சை செய்ய அனுமதி கேட்டாங்க… சரி அது மீராவின் ஆத்மாவிற்கு புண்ணியம் சேர்க்கட்டும்னு…'
"அப்படியே உன் பாக்கெட்டையும் ரொப்பிகிட்ட.. என்ன ஆளுயா நீ… இறந்தவங்க உடல் உறுப்புகளை தானம் செய்து கேள்விபட்டிருக்கிறேன். இப்படி விலைபேசி வித்து கேட்டதில்லை…" கேசவ் காறி துப்பினான்.
"இல்லை கேசவ்.. இவன்க என் மீராவை கொன்னுட்டான்ங்க. இதை விடக் கூடாது...அந்த ஹாஸ்பிட்டல்ல எப்படி இதை செஞ்சாங்க…"
"அது ஒருவகை உயிர் காக்கும் சிகிச்சைதானே… நீ பதட்டப்படாதே.. நான் ஹாஸ்பிட்டல்ல என்ன நடந்ததுனு விசாரிக்கறேன். நீங்க இப்ப கிளம்புங்க" என்று அவர்களை கிளப்பினான்.
காரில் போகும்போது அமைதியாக சத்யன் வந்தான். ரஞ்சன்தான் உதட்டை கடித்து கொண்டும் … கை விரல்களை பின்னிக் கொண்டும் பதட்டமாக இருந்தான்.
"ரிலாக்ஸாக இரு ரஞ்சன்… நாம ஒரு முடிவை நெருங்கிட்டு இருக்கோம்…"
"ப்ச்… இவன்க பேசறதையெல்லாம் கேட்டபின் மீரா உயிரோடு இருக்கிறாளா என்பதே சந்தேகமாக இருக்கு…"
"என்னோட உள்மனம் சொல்வதை கேளு… அவள் உயிரோடதான் இருக்காள்…"
"எனக்கு பயமாக இருக்கிறது… முகமாற்று ஆப்ரேசன்… பஸ் விபத்து… பரத் சொல்லும் உண்மைகள்…. நாம் அவளை இழந்து விட்டோமா?"
"இல்லை… இதையெல்லாம் தாண்டி ஒரு அதிசயம் நடந்திருக்கும். மீராவை சீக்கிரம் பார்ப்போம்…"
வீட்டு வாசலில் காரை நிறுத்தி நம்பிக்கையுஞற் நடந்த போகும் சத்யனை வெறித்த ரஞ்சன்…
'நம்பிக்கை மட்டுமே வாழ்க்கையை தருமா சத்தி. மீரா உயிருடன் இல்லை என்ற உண்மையை நீ எப்போது உணரப் போகிறாய்.?' என்று நினைத்தான். சத்யன் வீட்டினுள் சென்ற பின்னும் அங்கேயே நின்றான்.
அப்போது எதேச்சையாக பக்கத்து வீட்டை விட்டு வெளியே வந்த ஜெமி, ரஞ்சன் மட்டும் தனியாக நிற்பதை பார்த்து அவன் அருகே சென்றான்.