"ஹாய் ப்ரோ…" என்றழைக்கவும் அவனை பார்த்த ரஞ்சன்..
"ஹாய்.. உங்களை போலிஸ் ஸ்டேஷனில் பார்த்தேனே.. என்ன விஷயம்?" என்றான்.
ஒண்ணுமில்லை ப்ரோ… ஒரு ரிப்போர்ட் வாங்க போயிருந்தேன்."
"வாங்கிட்டீங்களா…"
"நாளைக்கு வர சொன்னாங்க."
"என்ன ரிப்போர்ட…"
"அங்கிள் ஆக்ஸிடென்ட் பற்றிய ரிப்போர்ட்… அது இருந்தால்தான் லீகலா ப்ராபர்ட்டிஸை ஆன்ட்டிக்கு மாத்த முடியும்."
"அதுக்கு டெத் சர்டிஃபிகேட்தான வேணும்"
"முதல்ல இதை வாங்கனும்… அப்புறம்தான் கார்பரேஷன்ல வாங்க முடியும்"
"ஓ நாளைக்கு முடியலைன்னா சொல்லுங்க. நான் வந்து வாங்கி தர்றேன்." ரஞ்சனே சொல்லவும்…
"தேங்க்ஸ் ப்ரோ… யு ஆர் வெரி கைன்ட்… நான் கேட்காமலேயே ஹெல்ப் பண்றேன்னு சொல்றீங்க" ஜெமி நன்றி தெரிவித்தான்.
"சரி நாளைக்கு பாரக்கலாம்' என்று ரஞ்சன் நகர்ந்தான்.
அவன் மேத்யூஸின் விபத்து பற்றி கேட்டிருக்கலாம்…. அல்லது ஜெமியாவது ஆள் மாறாட்டத்தை சொல்லி இருக்கலாம்… இரண்டும் தடுமாற்றத்துடன் கடந்து போக… அவர்களுக்கு உண்மை தெரியப் போகும் 'அந்த நாள்' மட்டும் கோணல் சிரிப்புடன் காத்திருந்தது.
அன்று இரவு உறங்கப் போகும் முன்…
"ம்மா… நான் இன்னிக்கு என் ரூம்ல தூங்கறேன்." என்று ரேச்சல் சொல்ல…
"நல்லது டியர். ஆனால் நடு ராத்திரியில குடுகுடுவென ஓடி வரக் கூடாது." ஷீலா நிபந்தனை இட்டார்.
"கனவே வரக் கூடாதுன்னு சொல்லுங்கள். அப்புறம் இன்னிக்கு மட்டுமாதான்...இந்த ரிக்வெஸ்ட்… நாளைக்கு உங்ககூடதான் தூங்குவேன்."
"இன்னிக்கு என்ன ஸ்பெஷல்?"
"ஒரு புடவையில் கலம்காரி பெயின்டிங் முடிக்கணும். கல்பி கேட்டிருந்தா"
"நைட் ரொம்ப நேரம் கண் விழிக்காதே" என்று ஷீலா சொல்லி விட்டு தன் அறைக்கு செல்ல...
அப்போது ரேச்சலிடம் வந்த ஜெமி,
"உனக்கு கலம்காரி வொர்க் தெரியுமா?"
"ரொம்ப அழகா செய்வாள் ஜெமி. சென்னையில் இருந்தப்ப கத்துகிட்டு இருப்பாள் போல.."