ம்… கரெக்ட் ரஞ்சன் அண்ணாவிடம் கேட்கலாம். அவர் ரொம்ப பொறுப்பானவர். அவள் முடிவெடுத்தாள். கடிதமாக அத்தனையையும் எழுதி டாக்டர்.ஷீலா மேத்யூஸ் என்று முகவரி இட்டாள். நாளை காலையில் அண்ணனிடம் சேர்த்து விட வேண்டும்.
'ஆண்டவரே… இந்த கடிதத்தை ரஞ்சன் அண்ணனிடம் சேர்க்கும்வரை எனக்கு அம்னீசியா குணமாகி விடக் கூடாது. கருணை செய்யுங்கள் கர்த்தாவே…' என்று ப்ரேயர் செய்து விட்டு நிம்மதியாக உறங்க ஆரம்பித்தாள்.
அதே இரவில் சத்யன் உறக்கம் வராமல் தவித்துக் கொண்டு இருந்தான். அவன் ரஞ்சனிடம் உறுதியாக கூறினாலும் ஆழ்மனதில் ஒரு சந்தேகம் துளிர் விட்டிருந்தது… மீரா உயிருடன் இருக்கிறாளா..?
ஆனால் அந்த ஆள் தெளிவாக சொல்கிறாரே… இறந்துபோன மீராவின் முகபகுதியை முகமாற்று சிகிச்சைக்காக தந்து விட்டதாக சொல்கிறாரே… அது பொய் எனில்..
மீரா உயிருடன் இருந்தால் அவன் பார்த்தது யாருடைய உடல்…?. ஏதாவது ஒரு இறந்த உடலை வைத்து ஆள் மாறாட்டம் செய்து மீராவை ஒளித்து வைத்திருப்பார்களா…
மருத்துவமனையில் விசாரித்தால் தெரியுமா… உண்மையில் அப்படி ஒரு அறுவை சிகிச்சை நடந்திருந்தால் மீரா மாதிரியே அந்த பெண்ணும் இருப்பாளா…?
சே… சே… நான் ஏன் இப்படி நினைக்கிறேன். மீரா உயிருடன்தான் இருக்கிறாள். ஏதோ ஒரு டெட்பாடியை கொண்டு வந்து அவனிடம் காட்டி ஏமாற்று வேலை செய்கிறார்கள். அவன் அடையாளம் கண்டுபிடிக்க கூடாது என்று முகத்தை சிதைத்து விட்டார்கள்…
பலவாறாக நினைத்துக் கொண்டே அவன் உறங்கி போனான்…
காலை வெயில் அழகான வண்ணங்களை தீட்டிக் கொண்டு இருந்தது. சுள்ளென்று எரிச்சலூட்டாமல் குளிர் கலந்து காற்றை வீசிக் கொண்டிருந்தது. அது அந்த மலை பகுதியின் பச்சை வண்ணத்திற்கு மேலும் குளிரை தந்தது.
சத்யன் மெதுவாக நடந்து கொண்டு இருந்தான். அவன் கையை பிடித்துக் கொண்டு… மனு… ஆமாம் மனு குட்டிதான்… நடந்து வந்து கொண்டிருந்தாள். மழலையில் பேசியதை கேட்டுக் கொண்டே அவனும் நடந்து கொண்டு இருந்தான்.
அவன் கண்கள் அடி வானம் வரை பார்வையை வீசி மீராவை தேடிக் கொண்டே இருந்தது. வாழ்க்கை முழுவதும் அவளை தேடிக் கொண்டே இருப்போமோ என்று நினைத்துக் கொண்டான். அப்போது…
அது… யார்… மங்கலான ஒரு உருவம்...மலை உச்சியில் நிற்கிறார்களே… அந்த பக்கம் கிடு கிடு