முன்பு போல சுயம் இழந்து மீரா மீரா என்று கலங்கி போக மாட்டேன். "
"எப்படி இப்படி ஒரு உறுதி வந்தது?"
"அன்பு நம்மை வாழ வைக்கும் தாத்தா. நான் மீராவின் மீது வைத்திருக்கும் அன்பை பலவீனமாக மற்றவங்களுக்கு காட்டக் கூடாது. அதை பலமாக காட்டினால்தான் என் மகள் எங்களை… எங்கள் காதலை… மதிப்பாள்."
"அடடா… கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. ஆமாம் அந்த உயரங்கள்னு சொன்னியே அது என்னப்பா… "
"மீரா சில கனவுகள் கொண்டிருந்தாள். பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கான இல்லம்… ஆதரவற்ற முதியவர்களுக்கான ஓய்வு இல்லம்… இலவச கல்வி… இப்படி நிறைய கனவுகள். அந்த கனவுகளை நனவுகளாக நிறைவேற்றி இன்னும் பல உயரங்களை தொடுவேன்."
"நல்லது… அப்போ நீ உங்க வீட்டுக்கு கிளம்பலாம்."
"நன்றி தாத்தா. நீங்களும் அங்கே வந்திடுங்க."
"எனக்கு இந்த ஊர் பிடிச்சு போச்சுப்பா.. இங்கேயே இருக்கேன்"
சத்யன் கிளம்பியதும் நந்தினியிடம் சென்றார்.
"என்ன நந்தும்மா… உன்னுடைய ப்ளாக் பஸ்டர் திட்டம் பஸ்ட் ஆயிடுச்சே"
"என்ன தாத்தா சொல்றீங்க?"
"நீ உன அண்ணனுக்காக போட்ட திட்டம் டமாலாயிடுச்சுனு சொல்றேன்."
"என்ன திட்டம்?" இவருக்கு என்ன தெரியும்…
"ரேச்சலோட சத்யனை சேர்த்து வைக்கும் ப்ளான் போட்டியே..அதைதான் சொல்கிறேன். அவன் மீராவின் நினைவில் நிறைய சோஷியல் வொர்க் செய்து யோகியாக வாழப் போறானாம்.."
"அட போங்க தாத்தா.. ஏற்கனவே ரேச்சல் ஒரு அம்னீசியா நோயாளினு தெரியவுமே திட்டம் தோல்வி அடைஞ்சிட்டது."
"இப்ப என்ன செய்ய போற?"
"ம்… ரேச்சலுக்கு அம்னீசியாவை குணப்படுத்த சைக்கலாஜிக்கல் ட்ரீட்மென்ட் ஆரம்பிக்க போறாங்க. அதுக்கப்புறம்தான் ஏதாவது முடிவெடுக்கனும்"
"எப்படினாலும் உன்னோட சாய்ஸ் ரேச்சல்தானா.."
"என்னமோ அவளை பிடிச்சு போச்சு தாத்தா. அவளுக்கு மனுவையும் அண்ணனையும் ரொம்ப பிடிக்கும். மனுவை பிடிக்கும்னு வாய்விட்டு சொல்றதுபோல அண்ணனை பிடிக்குனு சொல்ல மாட்டேங்கறா"
"உண்மையான அன்பு எப்போதும் நிலைத்திருக்கும்… அவளுக்கு குணமானாலும் கூட