"வாயை மூடுங்க. யாரு உங்க பின்னாடியே வர்றது. சார்… நீங்க கல்யாண மார்க்கெட்ல செக்கண்ட் சாய்ஸ்தான்… அதுவும் உங்களை மாதிரி சிடுமூஞ்சி பின்னாடி எவளும் ஓடி வர மாட்டாள். நான் உங்களுக்காக காரை நிறுத்தவில்லை… இதை ரஞ்சன்…" கையிலிருந்த கடித உரையை பார்த்தவன்… அவள் முடிக்கும் முன் குறுக்கிட்டவன்…
"ஓ… ரஞ்சனுக்கு லெட்டரா… இப்ப அவனை பிடிக்க பார்க்கிறியாக்கும். ஜாக்கிரதை என் தங்கையோட வாழ்க்கையில நீ தலையிட நினைச்சால்…"
"யோவ்… வாயை மூடுய்யா" அவள் கத்தினாள்.
"என்னது…" அவளுடைய தொணி மாறியதை அதிர்ச்சியுடன் கேட்டான்.
"இன்னும் கேவலமாக பேசி விடுவேன். எப்போ பார்த்தாலும் அவசர குடுக்கை மாதிரி குடுகுடுனு பேசிகிட்டு… தெரியாம பேசிட்டேனு அப்புறம் மன்னிப்பு கேட்கறது. அடுத்தவங்களுக்கு கொஞ்சம்கூட ஸ்பேஸ் தராமல்… பெரிய மகாராஜா… ஒருத்தவங்க நம்மகிட்ட என்ன சொல்ல வர்றாங்கனுகூட புரிஞ்சிக்காமல்…" அவள் கத்த ஆரம்பிக்கவும் அவன் வாயடைத்து போனான்.
"---"
"ஆமாம்… இப்பதான தெரியுது.. அந்தம்மா உன்னை விட்டுவிட்டு ஏன் ஓடிப் போனாங்கனு. வாயை திறக்க விடாமல் மகாராஜா மாதிரி பேசிட்டே இருந்திருப்ப… போடாங்னுட்டு அவங்க ஓடி போயிட்டாங்க." பேசிக் கொண்டே சைக்கிளில் ஏறியவள்...
"இன்னோரு முறை உன் முன்னே வந்து நின்னேன் என்றால் என்னை செருப்பால அடி" என்று கத்திவிட்டு சைக்கிளை மிதித்து சென்று விட்டாள்.
அதுதான் உண்மையோ… அவனுக்கு அந்த சந்தேகம் உண்டு. மீரா தன்னுடைய துன்பமான வாழ்க்கைமை அவனிடம் பகிர்ந்து கொண்டதில்லை. அவள் வீட்டினரின் அடாவடிகளை அவனிடம் சொன்னதில்லை. அவளுக்கு வந்த மோசமான வியாதிபற்றியும் பேசியதில்லை… ஒன் சைடாகவே பேசி இருந்திருக்கிறான். அவன் சொல்வதற்கு உம் கொட்டும் இயந்திரம்போல மீராவை ட்ரீட் செய்திருக்கிறான்..
ரேச்சல் திட்டியது காற்றில் சுழன்றடித்து அவனுக்கே மீண்டும் மீண்டும் எக்கோ அடிக்க ஆரம்பித்தது… அதை கேட்க முடியாமல் காரை கிளப்பி அலுவலகம் வந்து விட்டான்.
என்னமா திட்டி விட்டாள்…! காது ஙொய்ங் என்று இருந்தது. அதுசரி… அவள் ரஞ்சனை எதற்கு தேடினாள்.
அதற்கான பதிலை சற்று தாமதமாக வந்த ரஞ்சன் சொன்னான்.
ரேச்சலின் கடிதம் அவளுடைய அம்னீசியா வாழ்க்கையின் நிகழ்வுகளை பொதிந்து