சொல்ல அவரும் சரி என்று சொல்லி விறகு கட்டை தலையில் வைத்துக்கொண்டு குயிலியை பின்தொடர்ந்து நடந்தார்.
சிறிது தூரம் சென்றதும், யோவ்... பெருசு நில்லு,,, எங்கே இருந்து வருகிறாய்.. என்று ஒரு சத்தம் கேட்க திரும்பி பார்த்தார் ஆசிர்வாதம்.
யாரப்பா நீ?... நீயும் ஒருநாள் பெருசு ஆவாய்... ஆனால் அது போகட்டும், உனக்கெல்லாம் இப்பொழுது புரியாது.... சரி எதற்காக அழைத்தாய்... உன்னை நான் இதற்கு முன் பார்த்ததே இல்லையே... நீ எங்க ஊரைச் சார்ந்தவன் இல்லையே என்று அடுக்கடுக்காய் பேசிக்கொண்டே போனார் ஆசிர்வாதம் தாத்தா.
ஆள் மட்டும் இல்லை... வாயும் பெருசு தான் என்றவன் நான் யாராக இருந்தால் என்ன பெரியவரே... இந்த காட்டுக்குள் இருந்து வருகிறீரே... அங்கு ஒரு பெண்ணை பார்த்தீரா என்றான் மரியாதையாக...
பெண்ணா... நீ யாரை கேட்கிறாய் என்று யோசித்தவர் அந்த பெண்ணை கேட்கிறாயோ என்றார்.
நான் கேட்கும் பெண்ணிற்கு ஒரு இருபது வயது இருக்கும் என்றான் அவன்.
அந்த பெண்ணை கேட்கிறாயா... ஆமா ஆமா. நான் அந்த பெண்ணை பார்த்தேன். அவள் ரொம்ப பயந்து போயிருந்தாள். நான்தான் அவளுக்கு குடிக்க தண்ணி எல்லாம் கொடுத்தேன். ஒரு மருவாதைக்கு நன்றி கூட சொல்லாமல் ஓடிட்டாள். அப்படி என்னதான் அவளுக்கு அவசரம் என்றபடி அங்கிருந்து இரண்டு அடி எடுத்து வைத்தார்.
யோவ் பெருசு... பதில் சொல்லிட்டு போ, அவள் எந்த பக்கம் போனாள் என்றான் அந்த புதியவன்.
அது சரி... நீ கேட்கிற கேள்விக்கு நான் பதில் சொல்லணும். ஆனால் உனக்கு என் கிட்ட எப்படி பேசுறது என்று கூட தெரியல என்றவர் அங்கிருந்து நடக்க முயல அவனும் சரி சரி சரி... மன்னிச்சுகோங்க பெரியவரே.. அந்த பொண்ணு எந்த பக்கம் போனாள் என்றான் அவன்.
அவளை நான் அந்தப் பக்கமா தான் பார்த்தேன். அவள் எங்கிருந்தோ ஓடிவந்து வடக்கு பக்கமாக ஓடினாள் என்றார் ஆசீர்வாதம்.
சரி சரி... நீங்க போங்க... நான் பார்த்துக்கொள்கிறேன் என்று அவன் முன்னேற நான் வந்து உனக்கு அந்த இடத்தை காட்டவா என்றார் ஆசீர்வாதம்.
நீர் ஓரடி எடுத்து வைக்கிறதற்குள் நான் நாலு கிராமம் தாண்டி விடுவேன்... நீர் உன் வழியே போம் என்றவாறே தன்னோடு நின்றவர்களோடு காட்டிற்குள் சென்றான் அவன்.
குயிலியும் ஆசிர்வாதமும் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் மெயின் ரோட்டிற்கு வந்தனர்.
தாத்தா... ஆக்டிங் செம போங்க, நான் கூட பயந்துவிட்டேன். நீங்க ஆசீர்வாதம் தாத்தாவா? இல்லை... இந்த கிராமத்து ஆளா என்று சொல்ல இருவரும் இணைந்து சிரித்தார்கள்.