கல்யாணத்துக்கும் சேர்த்து வாங்கிட்டேன். ஆண்ட்டி செலெக்ட் பண்ண கலர்லாம் எப்படியிருக்கு சொல்லுங்க ஆண்ட்டி?"
"உன் செலெக்ஷனுக்கு என்ன தனம் சூப்பரா இருக்கு. சரி இதெல்லாம் எப்படியிருக்கு சொல்லு?" என்று நிறைய அழகான புடவைகள், சுரிதார் எல்லாம் வாங்கியிருந்தார். எல்லாமே உயர்ந்த ரகம், விலை உயர்ந்தது
"வாவ்! ஆண்ட்டி ரொம்ப நல்லாயிருக்கு எல்லாம் உங்களுக்கா?"
"என்ன கிண்டல் பண்றியா என்னை?" என்று நிக்கத் கேட்கவும் ,
"ஐயோ இல்லை ஆண்ட்டி, நீங்க வாங்கியிருருக்கீங்களே, அதான் கேட்டேன்!"
"இல்லம்மா, என்னோட அருமை பொண்ணுக்கு " என்று தனம் கூறினார்.
"சாரி ஆண்ட்டி, ரொம்ப நன்னாயிருக்கு எல்லாம். "
"நான் சொன்னது என்னோட அருமை பெண் தனத்துக்கு எல்லாம் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டே இல்ல, அது போதும்."
"ஐயோ ஆண்ட்டி எனக்கெதுக்கு இந்த புடவையெல்லாம், நான் ரொம்ப காஸ்டலி புடவையெல்லாம் கட்டறது இல்லை ஆண்ட்டி, ப்ளீஸ்! "
"இந்தக் கதையே வேணாம் நான் வாங்கியிருக்கேன் நீ உடுத்திதான் ஆகணும் வேற வழியே இல்ல உனக்கு!" என்று செல்லமான மிரட்டலுடன் கூறினார் நிக்கத் .
"ஐயோ ஆண்ட்டி ப்ளீஸ் சொன்னா கேளுங்க, உங்களுக்கு வாங்கணும்னு தோனித்துன்னா, ஒரே ஒரு காட்டன் சாரி வாங்குங்க, ப்ளீஸ்!"
"வேண்ணா அதையும் வாங்கிட்டா போச்சு" என்று நிக்கத் சொல்லவும்,
"ஐயோ ஆண்ட்டி வேணவே வேணாம்!" என்றாள்.
அவர்கள் எல்லா புடவையும் வாங்கி கொண்டு, நகைக் கடைக்கு சென்றார்கள், அங்கேயும் நகைகள் வாங்கி கொண்டாள் தனம். தன் தங்கைகள் இருவருக்கும் ஒரே எடையில் வேறு வேற மாதிரி வாங்கினாள். கல்யாண மாப்பிள்ளைக்கு மட்டும் பிறகு வாங்கிக்கலாம் என்று முடிவு செய்தாள். நிக்கத்தும், தனத்துக்கு தெரியாமல் அவளுக்கு கொஞ்சம் நகைகள் வாங்கினார். தன் பேத்தி சாய்ராவுக்கும் வாங்கினார். பில் பணம் கொடுத்து அங்கிருந்து கிளம்பினார்கள்.
வீடு வந்து சேரும்போது மூன்று மணி ஆயிற்று. அவள் அம்மா, "என்ன சாப்பிடறீங்க?"என்று கேட்கவும்
ஒன்னும் வேணாம்மா வெறும் காபி கொடுங்க என்று நிக்கத் கூறினார்.
தனம் ஒரு ஹோட்டலுக்கு போன் செய்து சாயந்தரத்துக்கு வேண்டிய டிபன் ஆர்டர் கொடுத்தாள்.