"மி டூ சன்!"
கடை வாசலில் கார் நின்றது, இருவரும் உள்ளே சென்றார்கள் அங்கே எதிரில் போகிறவர்கள் அவர்கள் இருவரையும் பார்த்தவுடன் அடையாளம் புரிந்து கொண்டனர் ஆனால் அதில் யார் அஜய் என்ற சந்தேகம் வந்தது, "சார் உங்க ரெண்டு பேர்ல யார் சார் அஜய், நீங்களா சார்?" என்று அவர்கள் அஜயை பார்த்து கேட்கவும் அவனுக்கு புரிந்தது, "ஆமாம் மேடம்! " என்று அவன் பதில் கூறினான்.
"சார் எனக்கு ஒரு ஆட்டோகிராஃப் போடுவீங்களா சார், எனக்கு உங்க பாட்டு எல்லாம் ரொம்ப பிடிக்கும்.
நீங்க ரொம்ப அழகாயிருக்கீங்க சார் ஏன் ஹீரோவா நடிக்கல சார், சான்ஸ் கிடைச்சா நடிப்பீங்களா?"
"மேடம் நான் பெர்சனல் வேலையா வந்திருக்கேன். தேங்க்ஸ் மேடம் , கொடுங்க," என்று அவள் கொடுத்த புக்கில் அவன் சைன் பண்ணி கொடுத்து விட்டு விடு விடுவென்று நடந்தான்.
அஜய்யோட போன் ரிங் வந்தது அதை எடுத்து பார்த்தான் "டாட் மாஸ்டர் என்று கூறினான் தன் போனை காண்பித்து.
"அப்படியா? பேசு!" அப்துல் கூறவும்,
"ஹலோ மாஸ்டர்?"
"ஹலோ அஜய் தங்கம், எப்படிடா இருக்க?"
"நல்லாயிருக்கேன் மாஸ்டர், சொல்லுங்க?"
"மாஸ்டர் சொன்னா கேப்பயில்ல, ஒரு ஆபர் வந்திருக்கு!"
"என்ன ஆபர் மாஸ்டர்?"
"ஆக்டிங்க்கு ஆபர் வந்திருக்கு! "
"யாருக்கு மாஸ்டர், உங்க மகனுக்கா?"
"என் மகனுக்கா.....?? ஓ! அபூவை பத்தி தெரிஞ்சுடுத்தா, நீ பார்த்தியா அவனை? தனம் சொன்னாளா?"
"இல்ல மாஸ்டர், நாங்க மதியம் லன்ச் ஒன்னாதான் சாப்ட்டோம், இப்ப டாட் என்னோடதான் இருக்கார் மாஸ்டர், நீங்களும் பாட்டிம்மாவும் வீட்டுக்கு வந்தீங்கன்னா சந்தோஷமாயிருக்கும் மாஸ்டர்."
"வறோம்பா, அதுக்கு முன்னாடி அவங்களுக்கு நான் இப்போ சொல்லணும், நீ உடனடியா சொல்லு உன்னோட முடிவை."
"மாஸ்டர் என்னோட படிப்பு பத்தி தெரியுமில்ல, எனக்கு படிக்க நிறைய இருக்கு, எனக்கு டைம்