“அத்தைனா??? சராவோட அம்மாவா???” என்றாள் மஞ்சு நம்ப முடியாமல்!
“அதே, அதே!”
“நீ என்ன கிராக்கா?? அவங்களை எதுக்கு உன்னோட அழைச்சுட்டு போன? சொந்த காசுல சூனியம் வச்சுக்குறீயா என்ன?”
“நான் ஏன் அதெல்லாம் செய்றேன். அவங்களா முடிவு செய்தாங்க. அவங்க மகனும் தலையை, தலையை ஆட்டினார். அவ்வளவு தான் கிளம்பி வந்துட்டாங்க!”
“அடக் கடவுளே! உனக்கு இனி ஜாலி லைஃப்ன்னு சொல்லு...”
“நீ வேற இப்படி எல்லாம் பேசி என்னை டென்ஷன் ஆக்காதே... அதான் மஞ்சு உனக்காக என்னால வெயிட் செய்ய முடியலை... சரி, நீ எப்போ யூ.எஸ் வர ப்ளான்ல இருக்க? நாம இங்கே மீட் செய்யலாம்...”
“இன்னும் எப்போன்னு சரியா தெரியலை அம்மு...”
“ரெசிக்னேஷன் ப்ராசஸ் ட்ரிகர் செய்துட்டீயா??”
“அந்த ஐடியாவோட தான் போனேன்... ஆனால் துர்கா ரொம்ப நேரம் பேசினாங்க... வேற ப்ராஜக்ட் கிடைக்குதான்னு பார்த்துட்டு டிசைட் செய்ய சொன்னாங்க...” என்றுத் தொடங்கி, துர்கா சொன்னதன் சாரம்சத்தை அமுதாவிடம் பகிர்ந்தாள்...
“துர்கா இஸ் கிரேட்... ரொம்ப சரியா சொல்லி இருக்காங்க... எனக்கும் இது மாதிரி அட்வைஸ் கொடுத்திருந்தா நானும் அவசரப் பட்டு வேலையை விட்டுருக்க மாட்டேன்...”
“நீ வேலைக்கு போனா மட்டும் உன்னுடைய சூப்பர் ஸ்டார் அத்தை சும்மா இருப்பாங்களா? அப்போவும் அதே கதை தானே ஓடும்... உங்க வீட்டில் என்றென்றும் டிவி சீரியல் மாமியார், மருமகள் டிஷூம் டிஷூம் தான்...!”
“அது எப்படியாவது ஓடட்டும்... ஆனால் வேலைன்னு போனா, தினம் தினம் புது சேலன்ஜஸ் வரும்... நிறைய பேரை மீட் செய்யலாம்... மனி’ன்னு மட்டும் இல்லாம ஒரு சாலிட் கோல், ஆம்பிஷன் இருக்கும்...”
“அம்மு, இங்கே பாரு, நீ ஒரு முடிவெடுத்தாச்சு... இதுக்கு மேல, அப்படி இருந்தா இப்படி இருந்தான்னு யோசிக்குறதுல அர்த்தம் இல்லை... எப்போவும் அக்கரைக்கு இக்கரை பச்சை தான்...!!!! வேலை செய்றவங்களுக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கு... வேலைக்கு போகாம வீட்டுல இருக்கவங்களுக்கும் வேற ஆயிரம் பிரச்சனை இருக்கு...”
“பரவாயில்லையே, கல்யாணம் முடிஞ்ச ஒரே வருஷத்துல “ஆன்ட்டியா” மாறி ப்ளேட் போடுறீயே... அதும் சாதாரண ப்ளேடா? ரம் பம் பம்... ரம்பம் பம் பம்...”
“நாம நேரா மீட் செய்யும் போது உனக்கு இருக்கு...”