“மஞ்சுவை மேனேஜ் செய்றது கஷ்டமா??? எனக்கு ஒரு பயமும் இல்லை... சரி, நீ நாளைக்கு வேலைக்கு போகனுமே... தூங்கு... அப்புறமா பேசுறேன்...”
“ஓகே அம்மு...“
அமுதாவிடம் பேசியது மஞ்சுவிற்குள் நல்ல ஒரு மனநிலையை ஏற்படுத்தி இருந்தது... இதனால் தான் நல்ல நட்புக்கள் வேண்டுமென்று சொல்கிறார்கள் போலும்...
யோசித்தவளுக்கு வினோதினியின் நினைவு வந்தது...
வினோதினி எப்படி மாறிப் போய் விட்டாள்...
இதை யோசிக்கும் போதே துர்கா அவளின் சிந்தனை வளையத்தில் வந்தாள்...
வினோதினி... துர்கா... அமுதா...
வினோதினி - நீயாவது என்னைப் புரிஞ்சுப்ப, என் சைட்ல பேசுவேன்னு நினைச்சேன்... நீ என்னடான்னா அவருக்கு, அவர் அம்மாக்கும் இப்படி ஜால்ரா போடுற???
துர்கா - ... எப்போவுமே பிஸியா தான் இருக்கோம்... லேட் நைட் வரைக்கும் மீட்டிங்க்ஸ், போன் கால்ஸ்ன்னு இருக்கு... குழந்தைங்க கூட டைம் ஸ்பென்ட் செய்றது வீகென்ட்ஸ்ல தான்...
அமுதா - அவங்களா முடிவு செய்தாங்க. அவங்க மகனும் தலையை, தலையை ஆட்டினார். அவ்வளவு தான் கிளம்பி வந்துட்டாங்க!
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம்... ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனை... ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் வாழ்க்கையை அணுகுகிறார்கள்...
சாதனா டிவியில் எதையோ ரசித்து சிரிக்கும் சத்தம் கேட்டது...
எப்படி பார்த்தாலும் திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கை தான் பெஸ்ட் என மஞ்சுவிற்கு தோன்றியது...
லவ் மேரேஜ் ஆக இருந்தாலும், அரேன்ஜ்ட் மேரேஜாக இருந்தாலும் திருமணம் எனும் பந்தம் சரியான ‘கடி’ தான்! அதனுடன் வரும் பொறுப்புகளை பற்றி சொல்லவே வேண்டாம்...!
அவள் இப்படி நினைப்பது மனோஜிற்கு தெரிந்தால் என்ன சொல்வான்???
மஞ்சு யோசித்தது தெரிந்ததுப் போல மனோஜிடம் இருந்து அழைப்பு வந்திருப்பதின் அறிகுறியாக அவளின் போன் சிணுங்கியது...
திருமணம் ‘கடி’ என்று யோசித்தது எல்லாம் காற்றில் பறக்க, ஆவலுடன் போனை காதில் வைத்தாள் மஞ்சு.
“குட் மார்னிங் மனோஜ்...”
“ஹேய் அதுக்குள்ளே உங்க வீட்டுக்கு போயிட்டீயா???” என்ற மனோஜின் குரலும்