“நீ எனக்காக சொல்றேன்னு தெரியும் அம்மு... காலேஜ் முடிச்ச உடனேயே வேலைன்னு போயாச்சு... இது வரைக்கு ஃபினான்ஷியலா மனோஜ் கிட்ட நான் டிபன்டென்ட்டா இருக்கலை... ப்ச்...”
“ரொம்ப குழப்பிக்காதே மஞ்சு... நீ வேலையை விட்டது நீ சொகுசா வாழனும்னு இல்லையே, மனோஜ்க்காகவும் தானே?? அது அவருக்கும் தெரியும்... கணவன் மனைவின்னா ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிக்குதோ பிடிகலையோ அப்பப்போ விட்டுக் கொடுத்து தான் ஆகனும்...”
“கரக்ட்... நானும் அப்படி தான் யோசிச்சு மனசை தேதி வச்சிருக்கேன்... உன் கிட்ட பேசினது மனசுக்கு நல்லா இருக்கு... தேங்க்ஸ்...”
“எனிடைம் மஞ்சு... டேக் கேர்... நானும் டைம் கிடைக்கும் போது பேசுறேன்...”
“சரிப்பா... பை...”
உண்மையாகவே அமுதாவிடம் பேசியது மஞ்சுவை ரிலாக்ஸ் ஆக்கி இருந்தது... அவளின் அடி மனதில் மறைத்து வைத்திருந்த கவலைகள், வருத்தங்களை பற்றி அமுதா அவளாகவே நேரடியாக பேசியது, மஞ்சுவிற்கு தெளிவைக் கொடுத்திருந்தது என்றும் சொல்லலாம்!
அதனால் மாலையில் மனோஜ் வந்தப் போது மலர்ச்சியுடனே அவனை வரவேற்றாள்...
“காலைல நான் கொடுத்த லவ் ட்ரீட்மென்ட் நல்லா வேலை செய்திருக்கு போலருக்கே pbs... அப்போ பார்த்ததுக்கு இப்போ இன்னும் எக்ஸ்ட்ரா ஹாட்டா இருக்க...” என்று அவளை சீண்டினான் மனோஜ்...
“உங்க கண்ணுல கோளாறு, அதுக்கு நான் என்ன செய்றது???”
“ஆமாம்... என் கண்ணு தான் சரியா தெரிய மாட்டேங்குது... இங்கே இருந்து பார்த்தா ஒன்னும் தெரியலை... பக்கத்துல வா pbs... இல்லை நானே வரேன்...”