மனோஜ் அவன் அமர்ந்திருந்த சோஃபாவை விட்டு எழுந்து மஞ்சு இருந்த சேரில் அவளோடு இழைந்துக் கொண்டு அமரவும், மஞ்சு பொய் கோபத்துடன் முறைத்தாள்...
“இப்படி கோபப் படும் போது நீ இன்னும் அழகு...”
“இதையே தான் சிரிக்குறதுக்கும் சொன்னீங்க... பொய் தானே சொல்றீங்க???”
“ச்சேச்சே... என் pbs என்ன செய்தாலும் அது தனி அழகுன்னு அர்த்தம் டார்லிங்...”
“பாருடா என் முசுட்டு மேனேஜர் எவ்வளவு மாறிப் போயிட்டாருன்னு...”
“pbs, சொல்ல மறந்துட்டேனே... அம்மா கிட்ட இன்னைக்கு பேசினேன்... ஜோதி கல்யாணம் பத்தி கேட்டாங்க... நமக்கு லீவு கிடைக்குற டைமா பார்த்து டேட் ஃபிக்ஸ் செய்றதா சொன்னாங்க... டூ த்ரீ மந்த்ஸ்ல வச்சா ஓகே’ன்னு சொல்லி இருக்கேன்... நாம ட்ராவல், லீவ் எல்லாம் ப்ளான் செய்ய சரியா இருக்கும்... நீ என்ன நினைக்குற???”
“எனக்கு ஓகே தான் மனோஜ்... அத்தை வேற ஒன்னும் சொல்லலையா??”
நிர்மலாவும் சரி, பத்மாவும் சரி மஞ்சு வேலையை ராஜினாமா செய்வதை ஏற்றுக் கொள்ளவில்லை! இரண்டு வீட்டு பெரியவர்களுமே அவளை வேலையை தொடருமாறு தான் அறிவுரை வழங்கினார்கள்... மஞ்சு தான் அவர்களின் பேச்சை மீறி முடிவெடுத்திருந்தாள்...
இது மனோஜிற்கும் தெரியும்...
அதனால் மஞ்சு எதனால் அதைக் கேட்கிறாள் என்பதை அவனால் புரிந்துக் கொள்ள முடிந்தது...
“அம்மா எதுவும் கேட்கலை pbs... நீயே ஒரு இரண்டு தடவை டைம் இருக்கும் போது அவங்களோட பேசு... எல்லாம் சரியா போயிடும்...” என்று சொல்லி மனைவியை தேற்றினான்...
மஞ்சுவிற்கு அது அத்தனை சுலபமானதா என்றுத் தெரியவில்லை...
தொடரும்...