(Reading time: 9 - 18 minutes)
Pottu vaitha oru vatta nila - Part 02
Pottu vaitha oru vatta nila - Part 02

மஞ்சுவின் விழிகள் கணவன் சொல்லாமலே அவனை தாண்டி அவனின் பின்னே நின்றிருந்தவர்களிடம் போனது.

  

“சரவணன்...” என மனோஜ் பேசத் தொடங்கியப் போதே, அமுதா முன்னே வந்து நின்றாள்.

  

“உனக்கு எவ்வளவு கொழுப்பு! என் கிட்ட நீ பொய் சொன்ன!?” என்றாள் அமுதா.

  

“நீ பேசாதே! நீ சிகாகோ வந்து எவ்வளவு நாள் ஆச்சு? எனக்கு ஒரு போன் செய்தீயா நீ? மனோஜ் வழியா எனக்கும் தெரியும்னு உனக்கு நல்லா தெரியும், இருந்தாலும் ஒரு வார்த்தை சொன்னீயா?” என்று தோழியிடம் கேள்வி கேட்டாள் மஞ்சு.

  

“அதுக்கு காரணம் யாரு, நீ தானே??” என்று அமுதா அடுத்து மறுக் கேள்வி கேட்கவும், மனோஜ்,

  

“உள்ளே போய் பேசலாமே...” என்றான் தயக்கத்துடன்...

  

மஞ்சு மௌனமாக கதவை தாண்டி உள்ளே செல்ல, அமுதா அவளை தொடர்ந்து சென்றாள்.

  

மனோஜும் சரவணனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அவர்களை தொடர்ந்து சென்றார்கள்.

  

“இதெல்லாம் ஸ்டார்ட் செய்தது நீ தான் மஞ்சு...” என்று வெளியே விட்ட இடத்தில இருந்து தொடர்ந்தாள் அமுதா.

  

“நான் தான் ஸ்டார்ட் செய்தேன்னா, நீ என் கிட்ட ஏதாவது கேட்டீயா என்ன?” என்றாள் மஞ்சு!

  

“நான் எதுக்கு கேட்கனும், நீ ஏன் பொய் சொன்ன, அதை முதல்ல சொல்லு...”

  

மஞ்சுவும், அமுதாவும் தொடர்ந்து கேள்வி மீது கேள்வி கேட்டுக் கொண்டே இருக்க, சரவணன் மனோஜிடம்,

2 comments

  • Nanbenda!! Much awaited get together 😍😍 indha rat face-a thangalai 😉bad face veraya 😂😂😂 Lovely update. Nalla poramai paduranga :D BINDU ma'am 👏👏👏👏👏👏👏👏 parcel seithuttu vandha food ellam ena acho :eek: waiting to read the next update.<br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.