"நிறைய விஷயத்தில சரா'வும், மனோஜும் நல்ல மேட்ச் மஞ்சு..." என்றாள் அமுதா.
"அது எப்படியோ, ஆனால் சரா கம்பல் செய்து மனோஜை ஒன் மந்த் லீவ் எடுக்க சொல்லி இருந்தது எனக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருந்தது... சென்னைக்கு போயிருந்தா கூட இப்படி ஒரு கவனிப்பு இருந்திருக்காது... அம்மா வேற போன்ல பேசுறப்போ எல்லாம் வேலை செய் செய்ன்னு திட்டிட்டு இருந்தாங்க... மனோஜ் எதையாவது என்னை செய்ய விட்டா தானே???!!!"
புகார் போல சொல்ல நினைத்தாலும் மஞ்சுவின் குரலில் கலந்திருந்த பெருமை அமுதாவிற்குப் புரிந்தது!
தோழியை பார்த்து புன்னகைத்தவள்,
"உன்னை நான் இப்படி பார்த்ததே கிடையாது மஞ்சு... ரிசர்வ்டா, தேவைக்கு பேசி, அதிசயமா சிரிக்குற மஞ்சுவை தான் எனக்கு தெரியும்... எதுக்கெடுத்தாலும் பயப்பட வேற செய்வ..." என்றாள் கேலி கலந்து!
"எனக்குமே கூட லைஃப் மொத்தமா மாறிப் போன மாதிரி இருக்கு அம்மு... எங்க வீட்டுலேயும் நான் செல்லம் தான்... ஆனால் கல்யாணத்துக்கு அப்புறம் எத்தனை சேலன்ஜஸ், எத்தனை அட்ஜஸ்ட்மென்ட்ஸ்... அதெல்லாம் தாண்டியும் மனோஜ் மேல இருக்க பான்ட்... அவர் காட்டுற அன்புல வர சந்தோஷம்..."
"சரி, சரி... போதும் உன் ஓவர் லவ்ஸ்..."
"இல்லை அம்மு விர்ஜினியால இருந்து வந்தப்புறம் நீ மனோஜைப் பார்த்திருக்கனும்... நான் அவர் கூட தான் இருப்பேன்னு சொன்னதுல அவருக்கு ரொம்ப சந்தோஷம் ப்ளஸ் அதே அளவு டென்ஷன்... ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆனப் போது நான் அவரைப் பயப்படாம இருங்கன்னு சொல்லிட்டு இருந்தேன்னா பார்த்துக்கோயேன்..."
அமுதா அமைதியாக சரவணனையும், மனோஜையும் பார்த்தாள்...