(Reading time: 26 - 52 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

”நானேதான் எப்பவும் இந்த கொம்பன் நியாயத்தோட பக்கம்தான் இருப்பான்”

  

”அதுசரி ஆமா வீட்டு வேலைகள் என்னாச்சி” என கேட்க அவன் முகம் பிரகாசமானான்

  

”ஓ அதுவா நடந்துக்கிட்டே இருக்கு இப்ப வரைக்கும் லிஸ்ட் படி 5 வேலைகளை முடிச்சிட்டோம்”

  

”5 தானா அப்ப மீதி”

  

”பொறு என்ன அவசரம் வீடு எங்க போகப் போகுது இல்லை நான் எங்க போகப் போறேன் எல்லாம் தினமும் ஒவ்வொண்ணா செய்து முடிக்கிறேன், அப்புறம் போலீஸ் கேஸ் வரைக்கும் போயிருக்கே, இதுக்காக நீ போலீஸ் ஸ்டேஷன் போகனும்னா சொல்லு துணைக்கு வரேன்”

  

”அதுக்கு அவசியம் இல்லை, பிரச்சனை செய்தவங்க இனி நாங்க எந்த தொல்லையும் செய்ய மாட்டோம் எங்க மேல கேஸ் போடாதீங்கன்னு கெஞ்சி கேட்டு எழுதி கொடுத்துட்டு போயிட்டாங்களாம், கேஸ் போட்டாதானே நான் போகனும் கேஸ் போடாததால நான் போக வேண்டிய அவசியம் இல்லை”

  

”சரி சரி இன்னிக்கு எல்லாமே நல்லதாவே முடிஞ்சது“

  

”ஆமாம் கொம்பா எனக்கே என்னை நினைச்சா ஆச்சர்யமா இருக்கு நானா இப்படின்னு”

  

”ஏன் அப்படி சொல்ற”

  

”இதுவரைக்கும் எங்கப்பாவுக்கு நான் ஒரு மகளா செல்லமா வளர்ந்தேன், ஆனா எப்ப உன்னை கல்யாணம் செய்துக்கிட்டேனோ அப்பவே எனக்குள்ள வீரம் வந்துடுச்சி, எதையும் எதிர்த்து நிக்கற துணிச்சல் வந்துடுச்சி, பாரேன் எங்கப்பா செய்ய தயங்கற காரியத்தை நான் சட்டுன்னு செய்துட்டு வந்துட்டேன், எனக்கு பின்னாடி நீயிருக்கங்கற தைரியம்தான் எனக்கு

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.