”ஆமாம்“
”ஏன் வேலை அதிகமா இருந்ததா”
”அப்படியில்லை உன்னை பத்தி நினைச்சிக்கிட்டு இருந்தேனா அதனால தூக்கம் வரலை”
”என்னைப் பத்தியா என்ன நினைச்ச” என ஆர்வமாக அவன் அருகில் சென்று அமர அவனுக்குள் மோகதீ எரிய ஆரம்பித்தது.
”சொல்றேன் அதுக்கு முன்னாடி நீ ஒண்ணு செய்யனும்”
”என்னது”
”என்னை ஒரு முறை கட்டிப்பிடி”
”எது” என அலற
”சும்மா”
”சும்மாலாம் முடியாது தப்பு யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க நான் மாட்டேன்பா நான் போறேன்” என பதட்டமாக சொன்னாளே தவிர எழுந்தபாடில்லை
”ஒரு முறைதானே கேட்கறேன் இங்க பாரு யார்கிட்டயும் இதைபத்தி சொல்லமாட்டேன் என்னை நம்பு ஒரு முறை கட்டிபிடியேன்”
”ம்ஹூம் இது ரொம்ப தப்பு”
”தப்புதான் தெரியுது என்ன செய்றது உன்கிட்டதானே உரிமையா கேட்க முடியும், அடுத்தவங்ககிட்டயா கேட்க முடியும் கேட்டா என்னாகிறது வம்பாகும், அதுக்கு பதிலா நீயே ஒரு முறை வாயேன் வா வா சட்டுன்னு வந்து கட்டிப்பிடி” என கெஞ்ச அவளோ