(Reading time: 26 - 52 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

  

பக்கத்து நிலக்காரனோ

  

”போலீஸா வரட்டுமே என்ன இப்ப எங்களுக்கு ஒண்ணும் கவலையில்லை”

  

”இதப்பாரு அவசரப்பட்டு வார்த்தையை விடாத நீ ஏற்கனவே நிறைய பிரச்சனைகளை செய்துட்ட, இதுபத்தி எங்கப்பா ஏற்கனவே என்கிட்ட சொல்லிட்டாரு அப்பவே உன்னைப்பத்தி நான் போலீஸ்கிட்ட புகார் கொடுத்தேன், என்னிக்கு நீ இப்படி வந்து தகராறு செய்றியோ அன்னிக்கு கூப்பிடு கையும் களவுமா பிடிக்கறேன்னு சொன்னதால இத்தனை நாள் காத்திருந்தேன் இன்னிக்கு நீ வசமா மாட்டின“ என சொல்ல வந்தவனோ அரண்டான்

  

”என்ன நினைச்ச பொண்ணுதானே சுலபமா அவளை ஏமாத்திடலாம், மிரட்டி உருட்டி அடிபணிய வைக்கலாம்னு நினைப்பா, அப்பா இங்க வர்றதில்லை என் புருஷனும் வர்றதில்லைன்னு நினைப்பிலதானே இங்க வந்து ஆடற, உன்னால என்னை அசைக்க முடியாது என்னை யாருன்னு நினைச்ச, சண்முகம் பொண்ணு மட்டுமில்லை கொம்பன் பொண்டாட்டி நானு ஜாக்கிரதையா இரு” என மிரட்ட அவனோ பயந்தான்.

  

அதற்குள் காவல்துறை வர அதைக்கண்டு அவர்கள் தெறித்து ஓட அவர்களை விரட்டிபிடித்தனர் அதிகாரிகள் அப்படியே அவர்களை போலீஸ் வண்டியில் ஏற்றிக் கொண்டார்கள் காவேரியிடம் வந்த அதிகாரியோ

  

”இனிமேல இவங்களால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது நீங்க நிம்மதியா இருக்கலாம்” என சொல்ல அவளோ நன்றி சொல்ல அவர்களும் கிளம்பிச் சென்றார்கள்.

  

சட்டென பிரச்சனை முடியவும் அங்கிருந்தவர்கள் அவளை நினைத்து பெருமைப்பட்டார்கள், கொம்பனின் தந்தை கூட ஆச்சர்யப்பட்டார், தனக்கு எப்பேர்பட்ட சிறந்த மருமகள் வந்திருக்கிறாள், கொம்பனுக்கு சரி ஜோடி இவள்தான் என நினைத்து கர்வம் கொண்டார்

  

அந்த மிதப்பில் சந்தோஷமாக அங்கிருந்து கிளம்பியவர் வழியெங்கும் காவேரியின் செயலை புகழ்பாடி தள்ளினார், வீட்டிற்கு சென்று தன் மனைவியிடம் நடந்ததை கூறி

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.