(Reading time: 26 - 52 minutes)
Indru nee naalai naan
Indru nee naalai naan

”என்னவோ மாப்பிள்ளை எனக்கு கலக்கமா இருக்கு” என சொல்ல அந்நேரம் காவேரி வந்தாள் மகிழ்ச்சியாக

  

”அப்பா அப்பா” என அழைத்தபடி வர கொம்பன் முன் வந்து நின்றான்

  

”வா வா” என ஆசையாக அழைக்க அவளோ தயங்கினாள்

  

”என்ன”

  

”கொம்பன் பொண்டாட்டியை கொம்பன் வரவேற்க கூடாதா என்ன” என கேட்க அவளோ மென்மையாக சிரித்து

  

”ஓ விசயம் உங்க வரைக்கும் வந்துடுச்சா”

  

”ஆமாம் பரவாயில்லை நீயும் என்னை போல வீரமாதான் இருக்க, எங்க நீ பிரச்சனை வந்ததும் அய்யோ அம்மான்னு கலங்காம பயத்தில ஓடி ஒளியாம தைரியமா நின்னு ஜெயிச்ச பார்த்தியா அங்க நிக்கற நீ”

  

”உங்கப்பா வந்திருந்தாரு உன்னை தேடிக்கிட்டு”

  

”அப்படியா என்னவாம்”

  

”நேத்து நீ கவலையோட வந்தியாம் அதனால உன்னை பார்க்கனும்னு வந்தாரு, அவர் வந்த நேரம் தோப்புல பிரச்சனை வரவும் அவர் உன்னை கூப்பிடனும்னு சொன்னாரு, நான்தான் வேணாம்னு சொல்லிட்டேன்“

  

”நல்ல காரியம்தான் செய்த என்னை கூப்பிட்டிருந்தா பெரிசா என்ன செய்திருப்பேன் வந்தவங்களை அடிச்சி விரட்டியிருப்பேன் அதைவிட நீ செய்ததுதான் சரி”

  

”கொம்பா நீயா பேசறது”

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.