சொல்ல அதற்கு யாருமே ஒப்புக் கொள்ளவில்லை, லபோ திபோ என கத்த அதைக்கேட்ட தாளாளர் எழுந்து நின்று அனைவரையும் அமைதியாக்கிவிட்டு
”ஓகே ஓகே விடுங்க இப்ப போய் எல்லாரும் லன்ச் சாப்பிட்டு வகுப்புக்கு போங்க” என சொல்ல அனைவரும் கோபத்துடன் சென்றார்கள். அவர்கள் சென்றதும் கோவலன் கண்ணகி மீதே கோபம் கொண்டான்
”ஏன் இப்படி எல்லாரையும் கஷ்டப்படுத்தற”
”செய்ய வேண்டிய வேலையை அவங்க சரியா செய்யலைன்னா இப்படித்தான் ஆகும், 2 மாசத்துல எக்ஸாம் வருது அதுக்குள்ள பாடம் எடுக்க முடியாதுன்னா அது அவங்களோட தப்பு அவங்களை புரிஞ்சிக்கிட்டு நான் இவ்ளோ தூரம் இறங்கி வந்திருக்கேன், சனி ஞாயிறு கல்லூரியிருந்தா என்ன தப்பு, அப்படியாவது மாணவர்கள் படிப்பாங்களே”
”நீ செய்றது ரொம்ப கடுமையா இருக்கு கண்ணகி, இதை மாணவர்கள் ஒத்துக்க மாட்டாங்க”
”அவங்க பாஸாகனும்னா கண்டிப்பா ஒத்துப்பாங்க” என சொல்ல அவனோ மறுக்க
”தாளாளர் உதவியின்றி இந்த திட்டத்தை செயல்படுத்தினா அப்புறம் அவரு மாணவர்கள் பக்கம் நின்னுடுவாரு விடக்கூடாது இவரை வைச்சிதான் எல்லாம் செய்யனும்” என மனதில் நினைத்தவள் உடனே அவனிடம்
”நான் எடுத்த முடிவுக்கு நீங்கதான் எனக்கு துணையா நிக்கனும், மாணவர்கள் பக்கம் நீங்க நிக்க கூடாது, இந்த விசயத்தை நீங்கதான் மாணவர்களுக்கு தெரியப்படுத்தனும்”
”எது நானா என்னால முடியாது”
”முடியாதா” என அவள் ஆழமாக ஒரு பார்வை பார்த்து கேட்க அவனோ அந்த பார்வையின் தாக்கத்தை காண முடியாமல் சட்டென தன் அறைக்குச் சென்றான்
”எப்படி மாட்டிவிடறா பாரு, இந்த விசயத்தில நான் முடிவு எடுத்தா எல்லா மாணவர்களோட