என் கனவில்... நான் கண்ட.. நாளிதுதான் கலாபக்காதலா
பார்வைகளால்... பலகதைகள்.. பேசிடலாம் கலாபக்காதலா
அந்த பாடலைக் கேட்டு திடுக்கிட்டான் தருண் அவள் பாடி முடித்து அவனை கட்டிபிடிக்கையில் அவனும் அறியாமல்
”பவானி” என அழைக்க ஹரிணியோ அதிர்ச்சியடைந்தவள் போல அதிர்ந்து அவனை விட்டு விலகி நின்றாள்
”இன்னுமா அவளையே நினைச்சிக்கிட்டு இருக்கீங்க” என எரிந்து விழுந்தாள் ஹரிணி
”இல்லை இந்த பாட்டு அவள் பாடி கேட்டிருக்கேன், அதனால எனக்கேத் தெரியாம அவள் பேரைச் சொல்லிட்டேன்“ என பேசவே தடுமாறினான் தருண்
”அப்போ நான் உங்களை தொட்டா கூட உங்களுக்கு அவள் தொட்டது போலதான் தோணும்”
”சே சே இல்லை அவளுக்கும் எனக்கும் நடுவுல முதலிரவே நடக்கலை“
”நடக்கலையா ஏன்”
”ஏன்னா இதுபோல பவானியோட இருந்தப்ப எல்லாம் எனக்கு நிவேதினி நினைப்பு வரும், பவானி என்னை கட்டிப்பிடிச்சாலும் சரி முத்தம் தந்தாலும் சரி, நான் நிவேதினின்னு சொல்வேனா அதனாலயே எங்களுக்குள்ள சண்டை வந்துடும், உண்மையை சொன்னா பவானிக்கும் எனக்கும் முதலிரவு நடக்கலை ஹரிணி”
”ஓஹோ அப்படியா இப்ப நான் தொட்டா கூட உங்களுக்கு பவானி நினைப்பு வருதே அப்ப நானும் உங்களோட சண்டை போடவா” என கேட்க அதிர்ந்தான் தருண்
”வேணாம் அதெல்லாம் வேணாம் பவானி” என உளற அவளோ முறைத்தாள்