விடக்கூடாது இவன் சாகறவரைக்கும் கஷ்டப்படனும்” என நினைத்தவள் தருணிடம்
”சரி தருண் நான் இந்த கேஸை வாபஸ் வாங்கிக்கிறேன் போதுமா”
”சூப்பர் ஹரிணி இப்பதான் எனக்கு நிம்மதியா இருக்கு” என சொல்லி மகிழ அவளுக்கு கோபம் தலைக்கேறி அவனை அடி அடி என அடிக்க வேண்டும் என கற்பனை செய்துகூட பார்த்துவிட்டாள் ஆனால் உண்மையில் அவ்வாறு செய்ய இயலாது என்பதற்காக அமைதிக் கொண்டாள்.
தருண் நினைத்தது போலவே அடுத்த நாளே ஹரிணி தந்த கேஸ் வாபஸ் வாங்க வைத்தான். வழக்கு போனால் என்ன குற்றவாளி நம் முன்னேதானே இருக்கிறான், அவனுக்கான தண்டனையை நாமே வழங்கலாம் என்ற எண்ணத்தில் தருணுடன் மகிழ்ச்சியாக வீடு திரும்பினாள் ஹரிணி
”இப்ப நீ ஹாப்பியா தருண்“
”ரொம்ப ஹாப்பி இனிமேல எனக்கு பவானியோட நினைப்பு வராது, உனக்கும் இளங்கோவோட நினைப்பு வராது, இனி நாம சந்தோஷமா வாழலாம்”
”ஆமாம் தருண் இறந்தவங்களை பத்தி யோசிச்சி வாழ்க்கையை தொலைக்கறதை விட கிடைச்ச இந்த அருமையான வாழ்க்கையை சந்தோஷமா வாழலாம்னு நான் முடிவு எடுத்துட்டேன்”
”அப்பாடா இப்பவாச்சும் ஒரு முடிவுக்கு வந்தியே, அப்புறம் என்ன செய்யட்டும் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யவா“
”தாராளமா” என்றாள் வெட்கத்துடன் அவ்வளவுதான் வானில் பறந்தான் தருண்.
அரக்க பரக்க முதலிரவுக்கான ஏற்பாடுகளை அவனே செய்தான். அறையை அலங்காரம் செய்தான், படுக்கையில் மலர்கள் தூவி அழகாக்கினான். தருணின் செயலைக் கண்டு