(Reading time: 39 - 78 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

”நீ சொல்றது எனக்குப் புரியுது. அதாவது கீர்த்தனா அவனை விரும்பலை, என்னைத்தான் விரும்பறாங்கற அதானே” என கேட்க அவன் ஆம் என பதில் சொல்லவே தேவாவோ

   

”கீர்த்தனா மேல எனக்கு நம்பிக்கை இருக்கு, இந்த நிமிஷம் வா என்கூடன்னா வந்துடுவா, ஆனா இந்த விக்ரம் அவனை என்ன செய்றது. அவன் ஒரு கற்பனை உலகத்தில வாழறான். அவளுக்காகவே ஹாஸ்டலுக்கு அடிக்கடி போய் காதலை வளர்த்துக்கிட்டவன்கிட்ட போய் நான் அவளை விரும்பறேன்னு சொன்னா என்னாகும் என்னைத்தான் தப்பா நினைப்பான். 

   

அதே கீர்த்தனா போய் சொல்றாள்ன்னு வையேன், அப்பவும் என்னாகும் என்னாலதான்னு நினைப்பான். எனக்கும் அவனுக்குமான நட்பு, காலேஜ் படிக்கறப்ப இருந்து இருக்கு நீ எனக்கு எப்படியோ அப்படித்தான் அவனும் கீர்த்தனாவால நாங்க ரெண்டு பேரும் பிரியறதுங்கறது ம்ஹூம் சரியா வராது பிரியறது கூட பரவாயில்லை 

   

ஆனா அவன் காதல் தோல்வின்னு தற்கொலை பண்ணிக்காம இருக்கனும் அதுக்கு என்ன செய்றதுன்னு தெரியலை. ஒரே சுத்தலா இருக்கு, இப்ப நான் யாரை சரியாக்கறது சரண்யாவா? பவியா? விக்ரமா? இவ்ளோ நாள் பிரச்சனையில்லாம கூலா போயிட்டிருந்தது என் வாழ்க்கை 2 நாள்ல எப்படி ஆயிடுச்சி பாரு” என தேவா கேட்க அதற்கு தாஸோ

   

”இந்த காதல் வேணாம்” என சைகையில் சொல்ல தேவாவோ

   

”இப்ப நான் நீ சொல்றது போல காதல் வேணாம்னு ஒதுங்கினேன்னு வையேன், அப்ப கூட கீர்த்தனா விக்ரமை ஏத்துக்க மாட்டா” என சொல்ல தாஸ் பயங்கரமாக  யோசித்தான்.

   

அந்நேரம் தேவாவிற்கு போன் வரவே எடுத்துப்பார்க்க அது ஒய்ப் என வரவே சிரித்தான். தாஸ் அவனது சிரிப்பிற்கு காரணம் என்ன என கேட்க அவன் போனை அவனிடம் காட்டி

   

”கீர்த்தனா போன் பண்றா அவளுக்கு எப்படி என்னோட நெம்பர் தெரியும் ஓ சரி சரி அதான் ஆபிஸ் வெளிய பெரிய போர்டுல என் போன் நெம்பர் இருக்கே மறந்துட்டேன். இப்ப என்னடா செய்றது இவள்ட்ட என்ன பதில் சொல்றது” என கேட்க

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.