“அது சரி அவளா வந்தா நான் என்ன செய்றது”
“சரி அவள் வந்தாலும் வரலைன்னாலும் ஒரு விசயம் உன்கிட்ட பேசியே ஆகனும்”
“ஏதாவது பிரச்சனையா”
“ஆமாம்“
“என்னாலயா”
“ஆமாம்”
“என்னது” என அச்சத்துடன் கேட்க
”நீ வா நான் சொல்றேன், இப்ப போன்ல சொல்ல முடியாது, நீ போன் வைச்சிடு, நான் போய் சாப்பிடப்போறேன்” என சொல்ல அவளும் சரியென போனை கட் செய்யவும் தாஸை பார்த்தான். அவனும் அமைதியாகச் சிரிக்க அந்த சிரிப்புக்கு பதில் சிரிப்பு சிரிக்க கூட முடியாமல் கவலையில் ஆழ்ந்தான்.
இருவரும் கவலையுடன் சோகமாக வீட்டை அடைந்தார்கள். அந்நேரம் பாட்டி அவனிடம்
”ஏண்டா லேட்டு”
“வேலை இருந்திச்சி”
“சரி சீக்கிரமா சாப்பிட்டு முடி” என அவனுக்கு பரிமாறிவிட தாஸ் சந்தேகமாக பார்க்க
”நீ என்ன பார்க்கற சாப்பிடு” என மிரட்ட அவனும் அமைதியாகச் சாப்பிட்டான்.
வீடு அமைதியாக இருப்பதைக் கண்டு ஆச்சர்யப்பட்ட தேவாவிற்கு சரண்யாவின் நினைப்பு