”நீ இங்க என்ன செய்ற” என கேட்க பாட்டியோ
”கடைக்கு கூட்டிட்டு போய் நல்லதா 4 துணி வாங்கிக் கொடு சரியா கூட்டிட்டுப் போ” என சொல்ல
”அப்பா எங்க பாட்டி”
“அவரு ஏதோ ஓட்டல்ல ஒருத்தன் தங்கறானாமே அவனோட ஏதோ மீட்டிங் பேச போயிருக்காரு” என சொல்ல தேவா பாட்டி சொன்னதைக் கேட்டு சரண்யாவை பார்த்தான். அவளது படப்படப்பைக் கண்டு சிரித்தவன்
”சரி சரி” என சொல்லி காரில் ஏறிக்கொள்ள அவளும் தாஸும் ஏறியதும் வண்டியை கிளப்பினான்
”ஏங்க” என அவள் அழைக்க தாஸ் திரும்பிப் பார்க்க அவளோ தேவாவை
”ஏங்க” என அழைக்க தாஸ் தேவாவை உலுக்கி பின்னாடி பார் என சொல்ல
”வண்டி ஓட்டறேன்ல என்ன விசயம் அப்படியே சொல்லு”
“நான் என் அண்ணாவை பார்க்கனும்”
“ஏன்?”
“அது நான் வந்த விசயத்தை அண்ணாகிட்ட சொல்லலை அதான்”
“ஓ சரி அப்புறம்”
“இல்லை நான் வந்து”