வர
”என்ன பாட்டி வீடே அமைதியா இருக்கு என்னாச்சி எல்லாரும் எங்க போனாங்க”
“எங்கயா எல்லாரும் சாப்பிட்டு தூங்கறாங்க”
“ஓ சரி அப்புறம் நான் ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்தேனே சரண்யா அவள் எங்க?”
என கேட்க பாட்டி வில்லங்கமாகச் சிரிக்கவும்
”எதுக்கு பாட்டி இந்த சிரிப்பு”
“அவள் பாவம்டா கட்டிக்க கூட துணியில்லாம கஷ்டப்படறா அவளுக்கு துணி வாங்கித்தரனும்”
“ஏன் வரும் போது 3 பெட்டிகளோடதானே வந்தா”
“இப்ப என்ன உனக்கு? ஒரு பொண்ணு துணியில்லைன்னு சொல்றா வாங்கித்தருவியா அதை விட்டுட்டு சீக்கிரமா சாப்பிட்டு அந்த பொண்ணை கடைக்கு கூட்டிட்டுப் போ”
“எது நானா முடியாது” என தேவா சொல்ல பாட்டி முறைத்தார்
”ஏன் முடியாதுங்கற?”
“எனக்கு நிறைய வேலைங்க இருக்கு பாட்டி”
“இதப்பாரு நான் சொன்னது சொன்னதுதான் சீக்கிரமா சாப்பிட்டு கிளம்பு” என கத்திவிட்டு அவர் சென்றுவிட தேவாவும் யோசனையுடன் சாப்பிட்டு முடித்து தாஸுடன் வெளியே வர பாட்டி சரண்யாவை தயாராக அவனது வண்டியின் முன் நிற்க வைத்திருந்தார் அவளிடம் வந்தவன்