(Reading time: 39 - 78 minutes)
Nenjukkulle innaarunnu
Nenjukkulle innaarunnu

”உண்மையை சொல்லு” என தாஸ் சைகையில் சொல்ல

   

”இதனால இவளுக்கு ஏதாவது கஷ்டம் வந்தா என்ன செய்றது, ஏன்னா பவி இவளோட ப்ரெண்ட்டாச்சே அவள் வீட்ல தங்கறா அதான் பார்க்கறேன்” என சொல்ல தாஸ்

   

”உண்மையை சொல்லு, கீர்த்தனா விக்ரமை விரும்பலை அப்புறம் என்ன” என சைகையில் சொல்ல தேவா உடனே சரியென தலையாட்டிவிட்டு போனை ஆன் செய்தான்

   

”ஹலோ” என்றாள் ஹஸ்கி வாய்சில்

   

”ஏய் கீர்த்தனா எதுக்கு இப்படி ஹஸ்கி வாய்சில பேசற, நானே வேற மூடுல இருக்கேன் இதுல நீ வேற” என சொல்ல அவள் சிரித்தாள்.

   

”சும்மாதான் போன் பண்ணேன் சாப்பிட்டீங்களா” என அக்கறையாகக் கேட்க

   

”இன்னும் இல்லை நீ சாப்பிட்டியா”

   

“நான் சாப்பிட்டேன். ஆமா நீங்க ஏன் சாப்பிடலை”

   

“வேலையிருந்திச்சி அதான் சரி சாயங்காலம் கோயிலுக்கு வருவல்ல”

   

“வரேன்”

   

“எத்தனை மணிக்கு”

   

“5 மணிக்கு“

   

“சரி உன்கிட்ட ஒரு முக்கியமான விசயம் பேசனும் தனியா வா அந்த பவியை இழுத்துக்கிட்டு வராத”

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.