“உன் மேல இல்லைம்மா, விக்ரம் உன்னை விரும்பறான்னு தாஸும் நானும் சந்தேகப்படறோம்”
என சொல்ல அந்த பக்கம் அமைதி நிலவியது
”கீர்த்தனா லைன்ல இருக்கியா இல்லையா”
“ஆனா எதனால இப்படி சொல்றீங்க”
“தெரியலை. விக்ரம் உன்கிட்ட பேசற விதம் அப்படியிருக்கலாம், நேத்து நைட் தாஸ்கிட்ட சொல்லியிருக்கான். உன்னைப்பார்க்கவே மாசாமாசம் ஹாஸ்டலுக்கு போனதாவும், பவி கல்யாணம் முடிஞ்ச உடனே உன்கிட்ட பேசி கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிறான். உனக்கும் யாரும் இல்லை, அவனுக்கும் அப்பா அம்மா இல்லை. அவனுக்கு உன்னை பிடிச்சிருக்கறதுக்கு இதுகூட காரணமா இருக்கலாம்” என சொல்ல அவள் பதட்டத்துடன்
”இப்ப நான் என்ன செய்றது”
“ஷ் அமைதியா இரு, இப்ப நீ வீட்டுக்கு போ அவன் கூட கொஞ்சம் ஒதுக்கமா நடந்துக்க”
“ஏதோ விசயம் பேசனும்னு சொன்னது இதுதானா”
“இதுவும் ஒண்ணு இன்னொன்னும் இருக்கு”
“என்னது?”
“சொன்னா நீ எப்படி நினைப்பேன்னு தெரியலை”
“சொல்லுங்க”