“கடைக்குதானே உன்னை கூட்டிட்டு போகச் சொன்னாங்க”
“ஆமாம் அதுக்குத்தான் நான் அண்ணாகிட்ட பணம் வாங்கிட்டு அப்புறமா கடைக்குப் போகனும்”
“அதுவரைக்கும் நான் எங்க நிக்கனும் நடுத்தெருவிலயா” என எரிந்துவிழுந்தான்
“இல்லை நீங்க போங்க நான் உங்களுக்குப் போன் பண்றேன்“
“என் போன் நெம்பர் இருக்கா”
“இருக்கு”
“எப்படி”
“பாட்டி சொன்னாங்க” என தட்டுத்தடுமாறி அவள் சொல்ல காரை ஓட்டலுக்கு செலுத்தி நிறுத்த அவசரமாக இறங்கி உள்ளே ஓடினாள் சரண்யா அவளது அவசரத்தைக் கண்டு சிரித்தவன் தாஸிடம்
”இவள்ட்ட ஏதோ வில்லங்கம் இருக்குடா, எனக்கு ஒரு விசயம் தோணுது ஆனா அது சரியா தப்பான்னுதான் இன்னும் புரியலை பார்க்கலாம் எப்படியும் 2 நாள் இருப்பாளே அப்ப பார்த்துக்கறேன்” என சொல்லிவிட்டு தான் கட்டுமானம் செய்யும் இடத்திற்குச் சென்றான்.
அங்கு வேலையாட்கள் வேலை செய்துக் கொண்டிருக்க தேவாவும் தாஸும் அந்த வேலையில் இறங்கினார்கள்.
நேரம் ஆனது மாலை 5 ஆகும் வேளையில் தாஸ் தேவாவை உலுக்கினான்
”இருடா இரு மேஸ்திரிகிட்ட பேசறேன் இல்லை பொறு” என சொல்லிவிட்டு மேஸ்திரியிடம்