“இல்ல 2 நாள் அந்த வீட்ல தங்கிட்டேன். இப்ப அந்த வீட்ல தங்கவே எனக்கு பயமாயிருக்கு”
“சரி நான் உனக்கு வேற வீட்டை பார்க்கறேன்”
“நான் தனியா எப்படி தங்கறது” என அவள் கேட்க
”நான் இருக்கேன்”
“ம்ஹூம் ஊர் தப்பா பேசும், ஹாஸ்டல்னா ஓகே” என சொல்ல தேவா யோசித்தான்.
”சரி எனக்கு 2 நாள் டைம் கொடு, என் வீட்ல ஒரு பிரச்சனை ஓடுது அதை முடிச்சிட்டு உன்னை என் வீட்ல என் பாட்டிகிட்ட விடறேன்”
“இதைத்தான் முதல் நாளே நீங்க சொன்னீங்க, நான்தான் கேட்கலை”
“பரவாயில்லை விடு” என அவளிடம் பேசிக் கொண்டே இருக்கும்போது போன் வரவும் வெறுப்புடன் போனை எடுத்துப் பேசினான்
”ஹலோ”
“ஹலோ நான் சரண்யா பேசறேன்” என்றாள்
”நீயா என்ன விசயம்?”
“அது துணிகடைக்குப் போகனும்“ என சொல்ல
“ஆமா நீ என் வீட்டுக்கு எதுக்கு வந்த?”