வைத்துவிட்டு வேகமாக கோயிலை நோக்கி நடக்கவும் தாஸிடம் விவரம் கூறினான்
”என்னாச்சின்னு தெரியலை கீர்த்தனா பேசறப்ப கவலை தெரிஞ்சது. வா என்ன ஏதுன்னு கேட்டுட்டு வரலாம்“ என காரில் ஏறி கோயிலுக்கு போகும் கீர்த்தனாவை வழியில் தடுத்து தனது காரில் அவளை ஏற்றிக் கொண்டான் தேவா
”என்னாச்சி கீர்த்தனா ஏதாவது பிரச்சனையா”
“ஆமாம்” என சொல்ல அவனோ
”சரி என்ன சொல்லு”
“எங்கயாவது போங்க எனக்கு தனிமையான இடம் வேணும்”
“நிலத்துக்கு நடுவில பண்ணை வீடு இருக்கு அங்க போலாமா” என தேவா சொல்ல தாஸ் மறுத்தான் கீர்த்தனா சரியென்றாள்.
தேவா உடனே பண்ணை வீட்டுக்குச் சென்றான். காரை விட்டு இறங்கி மூவரும் வீட்டுக்குள் சென்று சேர்ந்தனர்
”என்னாச்சி கீர்த்தனா ஏதாவது பிரச்சனையா” என கேட்க அவள் அவனை அணைத்துக் கொண்டு அழவும் தாஸ்க்கு கஷ்டமாகிப் போனது தான் இங்கு இருப்பது சரியல்ல என நினைத்து உடனே வீட்டை விட்டு வெளியேறி காரிடம் சென்று நின்றான். தேவாவோ கீர்த்தனாவின் செயலால் மனம் கலங்கி
”என்னாச்சிம்மா”
”எனக்கு நீங்க வேணும்”
“நான்தான் உன் கூடவே இருக்கேனே”