“கண்டிப்பா தரோம் நீ சூப்பர்வைஸ் பண்ணிடு”
“நானா நான் எதுக்கு அதான் பாரின் இன்ஜினியர் இருக்காரே, அவர் பார்த்துக்கட்டும் ஒரே இடத்தில ரெண்டு கத்திங்க இருந்தா சரியா வராது” என சொல்ல அதற்கு சரணோ
”எனக்கு இந்த ஊர் பத்தி அவ்வளவா எதுவும் தெரியாது இங்க இருக்கிறவங்க எப்படி பழகுவாங்க, பேசுவாங்கன்னு கூட தெரியாது என்னால ஆளுங்களை வேலை வாங்க முடியும்னு தோணலை”
“ஏன் சென்னையில நீ வேலை செய்யலையா”
“செஞ்சிருக்கேன். அங்க நான் சொன்னா உடனே நடக்கும், காரணம் அவங்க என் தாத்தாகிட்ட வேலை செய்றவங்க ஆனா இங்க நான் சொன்னா எப்படி உங்க ஆளுங்க வேலை செய்வாங்க” என கேட்க
”சரி நான் இருக்கேன் போதுமா”
”போதும்” என்றான் சரண். அதோடு மீட்டிங்கும் நல்லபடியா முடிந்தது. கல்லூரி ஓனரும்
”சரி சரி 2 நாள் கழிச்சி வேலையை ஆரம்பிக்கட்டும் அதுக்குள்ள வேற ஏதாவது தேவைன்னா இங்க வரைக்கும் வரவேணாம், என் காலேஜ்லயோ இல்லை விட்லயோ வந்துடுங்க அங்கயே மீட்டிங் போல பேசிடலாம்” என சொல்ல கைலாசம்
”இந்த முனிசிபாலிட்டி அலைச்சலை நாங்க செஞ்சிக்கிறோம், அதுக்கும் சேர்த்து பில் போட்டுடறோம்”
“கண்டிப்பா செய்ங்க”
“அப்புறம் ஒரு அக்ரிமெண்ட் போடனும்”