”வேணாம் எனக்கு என்னாச்சி”
”நீங்க மயங்கி கிடந்தீங்க”
”மயக்கமா எப்படி“
”தெரியலை”
என சொல்ல அவனோ மெல்ல கண்கள் மூடி யோசிக்கலானான். அதில் நேற்றைய இரவு நடந்தது தெரிய அதிர்ந்து, பயத்தில் கண்கள் திறந்தவன்
”இளங்கோ இளங்கோ” என உளற அவளோ
”தருண் என்னாச்சி, ஏன் இப்படி பயப்படறீங்க“
”நான் இளங்கோவை பார்த்தேன் ஹரிணி”
”அவர் உயிரோடவே இல்லை, தருண் ஏதாவது கனவு கண்டீங்களா”
”சே சே இல்லை நான் பார்த்தேன்”
”தருண் ப்ளீஸ் ரிலாக்ஸ் பயப்படாதீங்க, நீங்க பாதுகாப்பா ஆஸ்பிட்டல்லதான் இருக்கீங்க”
என சொல்ல அவனோ சுற்றி முற்றி பார்த்துவிட்டு
”நேத்து நைட் என்ன நடந்தது” என அறியா பிள்ளை போல கேட்க அவளோ
”ஆபிஸ்ல என்கிட்ட தப்பா நடந்துக்கிட்டானே ஒருத்தன், அவன் என்னை தேடி வீட்டுக்கே வந்துட்டான்” என்றாள் பதட்டமாக அவனோ வெகு இயல்பாக