மருத்துவர் தருணை நன்றாக பரிசோதித்துவிட்டு கவலையாக இருந்த ஹரிணியிடம்
”நத்திங் டூ ஒர்ரி நீங்க தாராளமா இவரை கூட்டிட்டுப் போகலாம்”
”தாங்ஸ் டாக்டர்”
”டிஸ்சார்ஜ் சம்மரி தரேன் வாங்க” என சொல்லிவிட்டு அவர் சென்றுவிட ஹரிணியோ தருணிடம்
”தருண் நாம வீட்டுக்குப் போகலாம்” என சொல்ல அவனும் சரியென்றான். அவளோ டிஸ்சார்ஜ் சம்மரி வாங்கிக் கொண்டு பில்லுக்கு பணத்தை தந்துவிட்டு தருணை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினாள்.
அவனோ வீட்டின் முன் பயத்துடன் நின்றான்
”வாங்க தருண் ஏன் அங்கயே நிக்கறீங்க” என ஹரிணி சொல்ல அவனோ
”ஆஆ ஒண்ணுமில்லை இதோ வர்றேன்” என சொல்லி அந்த கதவை பார்த்தான், தாள்பாள் சரியாக இருந்தது
”நேத்து இந்த கதவை உடைச்சோம் இப்ப எப்படி இது சரியாயிடுச்சி தப்பாயிருக்கே” என நினைக்க ஹரிணியோ
”கதவுல தாள்பாள் உடைஞ்சிருந்தது தருண் அதான் செக்யூரிட்டிகிட்ட சொல்லி சரியாக்க சொன்னேன் இப்ப தாள்பாள் சரியா போச்சா”
”ம் சரியாதான் இருக்கு“
”இதுக்கு எல்லாம் காரணம் அவன்தான், பாவி அவனை வேலையை விட்டு அனுப்பியிருக்க