ரிஷியிடம் வந்து நின்று
”அத்தான் காபி” என்றாள் ஆசையாக நந்தினி.
அவளுக்காகவே காத்திருந்தவன் போல அவள் தந்த காபியை எடுத்து அதை பார்த்தான்
”என்ன இது காபி நுரையா இருக்கு”
“அது மலாய் அத்தான் நல்லாயிருக்கும்”
”அப்படியா” என சொல்லிவிட்டு குடிக்க ஆரம்பித்தான். நன்றாக இருக்கவே சந்தோஷமடைந்தவன் காபி கப்பை அவளிடம் தந்துவிட்டு
”முதல் நாள் போட்டியில இறங்கற ஆல்தபெஸ்ட்”
“அவ்ளோதானா அத்தான்”
“மத்த பொண்ணுங்க செய்றதை பார்த்து பயந்துடாத உன்னோட பெஸ்ட் எதுவோ அதை செய் போதும்”
“அவ்ளோதானா அத்தான்” என ஏக்கமாக கேட்கவும்
”எல்லாருக்கும் பிடிக்கனும்ங்கறதுக்காக கஷ்டப்பட வேணாம். மத்த பொண்ணுங்களை கூட்டிட்டு வந்த காரணத்துக்காக அம்மா பாட்டி அப்பா எதையாவது நீ செய்றத நொட்டை சொல்வாங்க அதையெல்லாம் காதுல வாங்கிக்காத முடிவு எடுக்கப்போறது தாத்தாதான் அதனால அவர் மனசில இடம்பிடி. அவர் சொல்படி நடந்துக்க. அப்படி நீ ஒவ்வொண்ணா கவனமா இயல்பா செஞ்சாலே தாத்தாக்கு பிடிச்சிடும். அதனால பார்த்து பத்திரமா வேலை செய்” என்றான் அக்கறையாக
”சரிங்க அத்தான் அப்புறம்”