சாப்பிடவில்லை விரதம் இருந்து பொங்கல் வைத்த படியால் கோயில்லேயே தாங்கள் செய்த பொங்கலை சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுத்தனர். மாலையானதும் சாமி தரிசனம் முடித்த கையோடு ஊருக்கு வந்தவர்கள் டின்னரை ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்து தங்கள் அறைகளுக்கு சென்று உறங்கலானார்கள்.
போட்டியின் 12வது நாள்
விடிந்ததும்
காலையில் அவசரமாக எழுந்த வந்தனா தன்னுடைய மார்க்கை காண வந்தாள். ஆனால் அவளுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. நந்தினி அதிக மதிப்பெண் பெற்று முதலிடத்தில் இருந்தாள். அடுத்து மிருதுளா அடுத்து வந்தனா என இருந்தது. அதிலும் தன்னுடைய மதிப்பெண் மிகவும் குறைவாகவே இருந்தது.
வந்தனா கவலை பட ஆரம்பித்தாள். தனக்கு இருந்த 3 வாய்ப்பில் இப்போது ஒரு வாய்ப்புதான் உள்ளது. மிருதுளாவிற்கும் சரி நந்தினிக்கும் சரி இன்னும் 2 வாய்ப்புகள் உள்ளது. எப்படியாவது அவர்ளை விட்டு தான் ஜெயிக்க வேண்டும் என எண்ணினாள்.
காலையில் போர்டு முன்பு இதைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தவளிடம் வந்தார் தாத்தா
என்னம்மா பண்ற இங்க”
“அது தாத்தா நான் மார்க் பார்க்க வந்தேன்”
“சரி கவலையை விடு மார்க்தானே மாறி மாறி வரும்”
“என்னால இன்னிக்கு சமைக்க கூட முடியாது ஏன்னா என் கை இன்னும் ஆறலையே தாத்தா”
“சரி அதான் உனக்கு ஒரு வாய்ப்பு இருக்கே அதை பயன்படுத்திக்க காயம் ஆர்ற வரைக்கும் நீ சமைக்காத எப்ப உன் காயம் ஆறுதோ அப்ப சமையல் பண்ணு”