(Reading time: 19 - 38 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

அவளை காண காண ஆனந்தின் மனம் பட்டாம்பூச்சி போல பறந்தது. பெண் பார்க்கும் படலம் போல அந்த நிகழ்வை நினைத்துவிட்டான் ஆனந்த்.

   

நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்தபடி இருந்த வெங்கிக்குதான் ஆனந்தின் செயல் புரியவே இல்லை.

   

ரோஜாவும் தாத்தாவிடம் வந்து நின்றாள்

   

”இதுதான் ரோஜா எங்க பேத்தி“ என பாட்டி சொல்ல அதற்கு ஆனந்த் ரோஜாவை அப்போதுதான் முதல் முறை பார்ப்பது போல ஏற இறங்கப் பார்த்துவிட்டு

   

”பாட்டி உங்க பேத்தி அப்படியே உங்களை மாதிரி அழகா இருக்காளே  எப்படி பாட்டி இதெல்லாம்” என சொல்ல பாட்டியின் முகம் வெட்கத்தில் சிவந்தது ரோஜாவின் முகமோ கோபத்தில் சிவந்தது இரு முகத்தையும் கண்டு ரசித்தான் ஆனந்த்.

   

வெங்கியோ

   

”சரி சரி நேரமாகுது வாடா போலாம்” என மெதுவாக பேசி அழைக்க ஆனந்த் வர மறுத்தான்.

   

“அட இருங்க மாமா இப்பதான் பொண்ணு வந்திருக்கு பார்த்துட்டு போலாமே” என்றான் மெதுவாக

   

”இங்க என்ன பெண் பார்க்கும் படலாமா நடக்குது”

   

”எனக்கு அப்படித்தான் தோணுது வெயிட்டீஸ் மாமா” என சொல்லியவன் ரோஜாவிடம்

   

”உன் பேரு என்ன” என கேட்க ரோஜா கோபத்தில் அவனை முறைக்க அவனுக்கு இன்பமாக இருந்தது தாத்தாவோ அது புரிந்துக் கொள்ளாமல்

   

”ரோஜா தம்பி கேட்கறார்ல பதில் சொல்லும்மா” என சொல்ல அவளும் வேண்டா 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.