(Reading time: 19 - 38 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

   

”அங்க உன் அக்கா காத்துக்கிட்டு இருப்பா வா”

   

”அதானே அக்கா ஏன் அங்க இருக்கனும்“

   

”வேற எங்க இருப்பா“

   

”ப்ச் அட என்ன மாமா நீங்க, இவ்ளோ பெரிய அழகான வீடு இருக்கு, அன்பான தாத்தா, பாட்டி இருக்காங்க, பாசமுள்ள சொந்தக்காரங்க இருக்காங்க, இவங்களுக்கு மத்தியில என் அக்கா வாழாம அங்க நாலு சுவத்தை பார்த்துக்கிட்டு பாவம் கஷ்டப்படறா, இதுல வேற 5 வருஷம் ஆகியும் குழந்தையில்லைன்னு ஒரே கவலை படறா, அவளுக்கு ஆறுதல் சொல்லக்கூட அங்க யாரும் இல்லை இங்கன்னா எல்லாரும் இருக்காங்க பேசாம அக்காவை பார்சல் பண்ணி இந்த வீட்ல டெலிவரி பண்ணிடலாமா”

   

”என்னடா ஏதோ புட் டெலிவரி பண்ணலாமாங்கற மாதிரி கேட்கற“

   

”இல்லை மாமா பாவம் அக்கா நீங்களும் நானும் வேலைக்கு வந்தபின்னாடி, அந்த வீட்ல தனியா இருக்கனும், அது எவ்ளோ பெரிய கொடுமை தெரியுமா, அட நமக்கு யாருமில்லைன்னா சரி இவ்ளோ சொந்தங்கள் இருக்கறப்ப எதுக்கு நாம விலகியிருக்கனும்” 

   

”என்னடா உளர்ற பைத்தியமா உனக்கு” என சொல்ல ஆனந்த் உடனே தாத்தாவிடம்

   

”தாத்தா நான் ஏதாவது தப்பா சொல்லிட்டேனா வெங்கி மாமா யாரு உங்க சொந்தம் அப்போ அவர் மனைவி இங்க இருக்கறது தப்பா”

   

”தப்பேயில்லை” என சொல்ல காண்டானான் வெங்கி

   

”போதும் ஆனந்த் எல்லை மீறாத கிளம்பு இதுக்கு, உன் அக்கா ஒத்துக்க மாட்டா”

   

“அப்படின்னு அவள் சொன்னாளா ஒருவேளை அவள் சரின்னு சொல்லிட்டா நாளைக்கே 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.