(Reading time: 19 - 38 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

செய்து விவரம் கூற அவனோ அதிர்ந்து அவசர அவசரமாக வீடு வந்து சேர்ந்தான், அதற்குள் அங்கு ஆனந்திற்கு விருந்து போஜனமே ஏற்பாடானது, சிறிதும் கூச்சமில்லாமல் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் முன்பு வந்து நின்றான் வெங்கி

   

”மாமா வாங்க மாமா உட்காருங்க சாப்பாடெல்லாம் சூப்பரா இருக்கு அக்கா சமையல்ல இருந்து இன்னிக்கு ஒருநாள் நீங்க தப்பிக்கலாம் வாங்க மாமா வாங்க” என அழைக்க உடனே வெங்கிக்கும் ஒரு இலை போடப்பட்டு அவனையும் சாப்பிட அமர வைத்தார் பாட்டி அவனோ சாப்பிட்டபடியே பக்கத்தில் இருந்த ஆனந்திடம்

   

”என்னடா செய்ற இங்க“

   

”பார்த்தா தெரியலையா மாமா சொந்தங்களோட உறவு பாராட்ட வந்தேன்“

   

”யாருக்கு யார்டா சொந்தம்“

   

”என்ன மாமா ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசறீங்க, எங்க அக்காவை நீங்க கல்யாணம் செய்துக்கிட்டீங்க அப்ப உங்க சொந்தங்கள் எல்லாம் எனக்கும் சொந்தம்தானே மாமா”

   

”அதுசரி யாரை கேட்டு இங்க நீ வந்த“

   

”சாரி மாமா நானா வரலை நான் வீட்டுக்கு போகலாம்னு போய்கிட்டிருந்தேன், போற வழியில ரோடு ப்ளாக் பண்ணிட்டாங்க அதான் சுத்து வழியில வந்தேன், இங்க வந்து பார்த்தா ஒரே பிரச்சனை, நம்ம குடும்பத்தை காப்பாத்தனும்னு களத்தில இறங்கினேன் எப்படியோ பல நாள் பிரச்சனையை இன்னிக்கு தீர்த்து வைச்சிட்டேன், எல்லாருமே ஹாப்பியா இருக்காங்க மாமா சாப்பிடுங்க சாப்பிடுங்க”

   

”ஏன்டா அதெப்படி நீ வரும்போது மட்டும் ரோடு ப்ளாக் பண்ணி வைக்கறாங்க நான் வர்றப்பலாம் க்ளியராதானே இருக்கு“

   

”அப்படியா ஓ க்ளியர் பண்ணிட்டாங்களா சூப்பர் சரி சரி சீக்கிரமா சாப்பிடுங்க மாமா நேரமாகுது அக்கா வேற  தேடுவாங்க போகனும்ல எனக்குப் பரவாயில்லை தனியாளு என் 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.