”வாட் யூ மீன் இந்த வீட்டை பத்தி என்ன நினைச்சிக்கிட்டு இருக்கீங்க, இந்த வீட்டோட வரலாறு தெரியுமா உங்களுக்கு”
”வரலாறா” என ஒரு பணக்காரன் கேட்க அதற்கு ஆனந்த்
”ஆமாம் இந்த வீடு கட்டியே 150 வருஷம் ஆகுது”
”ரியலி”
”எஸ் கட்டறப்ப அந்த காலத்திலேயே வாஸ்து எல்லாம் பார்த்து முறைப்படி கட்டியிருக்காங்க, இந்த வீட்ல யார் இருந்தாலும் அவங்க செல்வ செழிப்போட இருப்பாங்களாம், அதோட இந்த வீட்டோட இன்னொரு அம்சமே இந்த வீட்டுக்கு அக்கம் பக்கத்தில எதிர்க்கன்னு எந்த வீடு இருந்தாலும் சரி, அவங்களும் செல்வ செழிப்போட இருப்பாங்களாம் அப்படியே உங்களை போல” என நைஸாக பேச அங்கிருந்த அனைவருமே அவனின் பேச்சை நம்பி ஏமாறினார்கள். இதைக் கேட்ட ரோஜா அதிர்ந்து போனாள்
ஆஆஆ என வாய் பிளந்தார்கள், சிலர் மகிழ்ந்தார்கள்
”சூப்பர் இப்படியொரு வரலாறு இருக்கும்னு சத்தியமா எங்களுக்கு தெரியாது ஆனந்த்”
”இந்த வீட்ல இவ்ளோ வாஸ்து அம்சம் இருக்கறதாலதானே எங்க அக்காவை இந்த வீட்டுக்கு கொடுத்திருக்கோம், இப்ப பாருங்க நாங்க எவ்ளோ செல்வ செழிப்பா இருக்கோம்னு”
”எஸ் எஸ் கரெக்ட் சாரி பார் த டிஸ்டர்பன்ஸ், நாங்க எதையோ நினைச்சி என்னவோ செய்துட்டோம் இனிமேல நாங்க இந்த வீட்டை டிஸ்டர்ப் பண்ண மாட்டோம்”
”ஓ தாங்க்யூ ஸோ மச்”
”இந்த தண்ணியை நானே ஆளுங்களை விட்டு கிளியர் பண்ண சொல்லிடறேன் சாரி