”ஓஹோ அதான் அடிக்கடி வெங்கடேசன் வந்து போறாரா“
”ஆமாம் இதோ நிக்கறாளே ரோஜா இவள் எங்க மாமாவுக்கு ஒன்னு விட்ட சித்தி பொண்ணுதான்” என சொல்ல அங்கிருந்த பணக்காரர்களின் முகம் சுருங்கிவிட்டது
”ஆமா இங்க என்ன பிரச்சனை, எதுக்கு இவ்ளோ கூட்டம்” என ஆனந்த் கேட்க அதற்கு ஒரு பணக்காரனோ சமாளிப்பாக
”அது ஒண்ணுமில்லை ஆனந்த் எங்க வீட்டு பைப்லைன்ல ஏதோ ப்ராப்ளம் போல, பைப் உடைஞ்சி தண்ணியெல்லாம் இந்த வீட்டு முன்னாடி தேங்கிடுச்சி”
”ஓ மை காட் எங்க வீட்டு முன்னாடி இப்படி ஒரு பிரச்சனையா, நாளைக்கு எங்க அக்கா வாழ போற வீடு இப்படியா இருக்கனும்”
”ஆனந்த் கேட்கறேன்னு தப்பா நினைக்க வேணாம், நீங்க எவ்ளோ பெரிய பிசினஸ்மேன் உங்க அக்காவை எதுக்காக இந்த மாதிரி வீட்ல தந்தீங்க“
”எங்க மாமா நல்லவரு, விசுவாசமானவரு, அவரோட குணம் பிடிச்சிப் போய்தான் எங்க அக்கா அவரை காதலிச்சி கல்யாணம் செய்துக்க சம்மதிச்சாங்க”
”ஓ அப்படியா சாரி ஆனந்த் இந்த விசயம்லாம் எங்களுக்கு தெரியாது”
”இந்த வீடு பார்க்கவே நல்லாயில்லை, எங்க வீட்டு பக்கம் இந்த ஓட்டு வீடு இருக்கறது எங்களுக்கு சங்கடமா இருக்கு ஆனந்த், இதுக்கு ஏதாவது வழி செய்யக்கூடாதா”
”வழின்னா எப்படி”
”இல்லை இந்த வீட்டை இடிச்சிட்டு பங்களா கட்டிடலாமா உங்ககிட்ட இல்லாத பணமா”