ஆனந்த்“
”இட்ஸ் ஓகே நாம எல்லாம் யாரு கார்ப்ரேட் ஆளுங்க நமக்குள்ள என்ன பார்மாலிடீஸ், லீவ் இட் ஓகே எல்லாரையும் சந்திச்சதில எனக்கு ரொம்ப சந்தோஷம், இன்னொரு முறை மீட் பண்ணலாம் பை” என பேச அங்கிருந்தவர்கள் உடனே கலைந்து சென்றார்கள்.
அங்கிருந்த கழிவு நீரை சுத்தம் செய்ய உடனே ஆட்களும் வந்தார்கள், துரிதமாக வேலைகள் ஒரு பக்கம் நடக்க இன்னொரு பக்கம் ஆனந்தோ ரோஜாவின் வியப்பான முகத்தைக் கண்டபடியே அவளது தாத்தாவிடம் சென்று
”தாத்தா எப்படியிருக்கீங்க, நான் ஆனந்த் வெங்கடேசன் இருக்காரே அவரோட மச்சான் நானு, என்னை ஆசிர்வாதம் செய்ங்க தாத்தா” என சொல்லி உடனே அவரின் காலில் விழ தாத்தா அசந்துவிட்டார், காலில் விழுந்தவனை நல்லாயிருப்பா என ஆசிர்வாதம் செய்து எழுப்பி விட உடனே அவன் பாட்டியிடம் சென்று
”பாட்டி என்னை ஆசிர்வாதம் செய்ங்க” என சொல்லி அவரின் காலிலும் விழுந்தான், அவரும் ஆசிர்வாதம் செய்து முடிக்க அடுத்து அந்த வீட்டில் இருந்த பெரியவர்கள் ஒவ்வொருவரின் காலிலும் விழுந்து வணங்கி ஆசிகளை பெற்றுக் கொண்டு ரோஜாவிடம் வந்து நின்றான்.
அவர்களுக்கோ எப்படியோ பல நாட்களாக இருந்த பிரச்சனையை ஒரே நிமிடத்தில் சரியாக்கிவிட்டானே என்ற மகிழ்ச்சி அதிலும் அவன் நமது சொந்தக்காரனாக இருக்கிறானே என்றதில் மட்டற்ற மகிழ்ச்சி, அவனோ ரோஜாவைப் பார்த்து செல்லமாக கண்அடிக்க அதுவரை வியப்பில் சிலையாக நின்றபடி இருந்த ரோஜா அதிர்ந்துப் போனாள்.
அதற்குள் அவனை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார் தாத்தா, பாட்டி அவனை அமர வைத்து காபி ஸ்னாக்ஸ் என அடுக்கினாள், மற்றவர்கள் பல நாள் பிரிந்திருந்த சொந்தம் திரும்பி வந்தது போல அன்னியோன்யமாக பேசிக் கொண்டிருக்க அவர்களுடன் பல நாள் பழகியவன் போல கலகலவென பேசி சிரித்துக் கொண்டிருந்தான் ஆனந்த்
அதைக்கண்ட ரோஜாவுக்கு திக்கென்றது. அவள் அவசர அவசரமாக வெங்கிக்கு போன்