(Reading time: 19 - 38 minutes)
Oru veedu iru vaasal
Oru veedu iru vaasal

அதுக்கு உங்க சம்மதம் வேணும் தருவீங்களா” என கேட்க அங்கிருந்த அனைவருமே சரி சம்மதம் என சொல்ல அவனுக்கு உற்சாகமாக இருந்தது

   

வெங்கியோ

   

”அதெல்லாம் சரியா வராது நீ இங்க வந்து போனா பார்க்கறவங்க என்ன நினைப்பாங்க, இந்த வீட்ல கல்யாண வயசுல ஒரு பொண்ணு இருக்கா அப்புறம் நாலு பேர் நாலு விதமா பேசுவாங்க தேவையா வேணாம் நாங்க இப்ப எங்க இருக்கோமோ அங்கயே இருக்கோம்”

   

”என்னது கல்யாண வயசுல ஒரு பொண்ணா யாரை சொல்றீங்க நம்ம ரோஜாவையா” என ஆனந்த ஆச்சர்யமாக கேட்க அதற்கு பாட்டியோ

   

”ஆமாம் ஏன்பா இதுக்கு இவ்ளோ ஆச்சர்யப்படற”

   

”இல்லை என் அக்கா கல்யாணத்தப்ப பார்த்தது, சின்ன பொண்ணாட்டம் இருந்தா இப்பவும் ஸ்கூல்தான் படிக்கறாள்ன்னு நினைச்சேன் ஏன்னா யூனிபார்ம்ல இருந்தாள்ல அதுக்கு சொன்னேன்“

   

”சே சே அவளுக்கு இப்போ 23 வயசாகுது வேலைக்கே போறா, இப்ப போய் ஸ்கூல்னு சொன்னா எப்படி” என தாத்தா கலகலவென சொல்லிச் சிரிக்க அவனும் சேர்ந்து சிரித்து அக்கம் பக்கம் பார்த்துவிட்டு

   

”ஓ சாரி சாரி எனக்குத் தெரியாது ஆமா எங்க ரோஜாவ காணலை” என சொல்ல அதுவரை அவள் அங்கு இல்லாததை யாருமே அறியவில்லை ஆனந்த் சொன்னதும் உடனே அவளை தேடினார்கள். 

   

”ரோஜா ரோஜா இங்க வாம்மா சொந்தங்க்காரங்க வந்திருக்காங்க நீ பாட்டுக்கு அறையில இருந்தா என்ன அர்த்தம் வாம்மா” என தாத்தா அழைக்க ஆனந்த் ஆர்வமுடன் காத்திருந்தான்.

   

அவளோ தாத்தாவிற்காக வெளியே வந்தாள். பாவாடடை தாவணியில் அழகாக இருந்தாள். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.