இங்க வந்துடறீங்களா சொல்லுங்க மாமா” என கேட்க வாய்அடைத்துப் போனான் வெங்கி.
பாட்டியோ
”ஆனந்த் அவசரப்படாத அப்படியெல்லாம் உங்க அக்காவை இங்க தங்க வைக்க முடியாது” என சொல்ல ஆனந்தின் முகம் கருத்துவிட்டது, வெங்கியின் முகம் மலர்ந்தது
”அப்படி சொல்லுங்க பாட்டி ஆனந்த் என்ன இருந்தாலும் நான் இவங்களுக்கு தூரத்து சொந்தமாச்சே, என்னை எப்படி இவங்க சேர்த்துப்பாங்க இதெல்லாம் சரியா வராதுன்னுதான் நான் வேணாம்னு சொன்னேன் சரி சரி கிளம்பு வா நேரமாகுது” என சொல்ல அதற்கு பாட்டியோ
”வெங்கி நான் சொல்ல வந்ததை சொல்ல விடு” என அதட்டிவிட்டு ஆனந்திடம்
”உங்க அக்கா இந்த வீட்டு மருமகள், தூரத்து சொந்தமா நாங்க வெங்கியை பார்க்கலை, அவனும் எங்க வீட்ல ஒரு ஆளுதான் தாராளமா வெங்கியும் உங்க அக்காவும் இங்க தங்கலாம் ஆனா, அவங்களா வந்தா அது நல்லாயிருக்காது முறைப்படி நாங்கதான் வந்து அவங்களை கூட்டிட்டு வந்து இங்க தங்க வைக்கனும்”
”ஓ இவ்ளோதானா சூப்பர் அதுக்கென்ன நாளைக்கே எங்க வீட்டுக்கு வாங்க அக்காவையும் மாமாவையும் கூட்டிட்டு வந்து இங்க தங்க வைச்சிக்குங்க”
”அப்போ நீ எப்படி தனியா”
”என்ன செய்றது பாட்டி அப்பா அம்மா இல்லை, அதுக்காக அக்காவை என் வீட்லயே என்கூடவே வைச்சிருந்தா ஊர் என்ன சொல்லும், தேவையில்லாத பழியை எங்க அக்கா சுமக்க நான் ஒருநாளும் விடமாட்டேன், அக்காவும் மாமாவும் இங்க தங்கட்டும் நான் இப்பவே என் அம்மா வீட்லதான் தங்கறேன், அதுவே பழகிடுச்சி அங்கயே நான் இருந்துக்கறேன், ஒண்ணும் பிரச்சனையில்லை, மாமாவை நான் ஆபீஸ்ல பார்த்துடறேன் அக்காவோட நினைப்பு வந்தா மட்டும் இங்க ஒரு எட்டு வந்து பார்த்துட்டு போறேன்,