" வெரி குட் ... குட் நைட் டா ...ஆல் தி பெஸ்ட் "
" ஹா ஹா தேங்க்ஸ் டா.... குட் நைட் "
(ஜானகி- சுபா )
" ஹாய் சுபி "
" வணக்கம்ங்க நான் சுபத்ரா ... உங்க ப்ராணசகி... ஞாபகம் இருக்குதுங்களா ? "
" ஹேய் என்னடீ ? ஏன் எனக்கு இவ்வளவு மரியாதை? "
" ஆமா பின்ன நீங்க என்ன சாதாரண ஆளுங்களா? நீங்க தி கிரேட் ரகுராம் சாரோட பி.ஏ ஆச்சே ? "
" ஓஹோ .. இதுதான் விஷயமா? புரியுது புரியுது ...இதான் உன் கோவமா ? "
" ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்"
" செல்லம்"
" ம்ம்ம் சொல்லு "
" நான் இதுவரை உன்கிட்ட எதையும் மறைச்சிருக்கேனா? ...........சொல்லு மறைச்சிருக்கேனா ? "
" இல்ல"
" அப்போ இதை மட்டும் எப்படி மறைப்பேன் "
" நல்லா பேச கத்துகிட்டே டி நீ"
" எல்லாம் உன் ட்ரைனிங் தான் டீ"
" ரொம்ப பேசற ..நித்யாவின் காத்து அடிசிருச்சோ "
" ஹேய் ஆமா நித்யா செம்ம கேரக்டர் ல "
" ஏய் பேச்சை மாத்தாதே "
" ஐயோ கண்டுபுடிச்சிட்டியா? மாமாவுக்கு ஏற்ற ஜோடிதான் "
" அடியே இதுக்கு மேல நீ நடந்ததை சொல்லாம இருந்தே நான் கொலைவெறி யாகிடுவேன் "
" ஹா ஹா " அழகா சிரித்தவள் அன்று நடந்தது அனைத்தையும் சொல்ல,
" இல்லை ஏண்டி என்கிட்ட சொல்லல முன்னாடியே ? "
" எங்கடி சொல்ல விட்டிங்க? காலையில் ரகு பேசினாரா, அதுக்கப்பறம் இவினிங் உன் கிருஷ்ணா அண்ணா பேசினாரு, அதுக்கப்பறம் அர்ஜுன் மாமா ... சரி இப்பவாச்சும் சொல்லலாம்னு போனை எடுத்தா அர்ஜுன் மாமாவுக்கு கால் வந்தது. இந்த நேரத்துல நீதான் கூப்பிடுவே நு நெனச்சேன் " என்று ஜானகி சொல்லும்போதே ரகுராமாகத்தான் இருக்கும்னு கணித்தாள் சுபி.
" என்ன சுபி இன்னும் கோவமா? "
" ச்ச்ச இல்லடா.. நிஜம்மாவே ஹேப்பியா இருக்கு ... ரகுராம் ரொம்ப நல்ல மாதிரி டீ .. அவன் உனக்கு கண்டிப்பா சப்போடிவா இருப்பான் . இது உனக்கு ஒரு புது அத்தியாயம்னு நெனச்சுக்கோ ... ஆல் தி பெஸ்ட் டா "
உணர்ச்சி பூர்வமாக பெசியவளின் குரலில் நெகிழ்ந்தாள் ஜானகி.
அதன் பின் தோழியர் கொஞ்ச நேரம் பேச , அர்ஜுனனை சுபத்ராவை அழைத்தான்.
" ஹேய் இளவரசி ...தூங்கலையா ? "
" இல்ல அர்ஜுன்...ஜானு கிட்ட பேசிட்டு இருந்தேன் "
" என்னாச்சுடா ? "
" என்ன அர்ஜுன் ? "
" உன் வாய்ஸ் சரி இல்லையே "
" அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல அர்ஜுன் "
" சுபீ "
"ம்ம்ம்ம்ம்ம்"
" உன்னை எனக்கு தெரியாதா ? "
( மூன்றே வார்த்தையில் அவள் ஜீவனை தொட்டுவிட்டான் அர்ஜுன் .
பெர்சனல்லி நான் பீல் பண்ண விஷயம் இது .. இப்போலாம் ஐ லவ் யு சொல்றது குட் மோர்னிங் குட் நைட் சொல்ற மாதிரி ஆச்சு. அந்த வார்த்தை சொல்ல ஒரு ஆணுக்கு பதட்டமும் பெண்ணுக்கு நாணமும் வருவது இப்போ கொஞ்சம் அரிதா இருக்கு. அப்படின்னா காதல் என்பது என்ன? ஐ லவ் யூ என்ற மூன்று வார்த்தையில்தான் காதல் இருக்கா? என்னை கேட்டா இதை விட அழகான மூன்று வார்த்தைகள் நம்ம தமிழில் இருக்கு....." உன்னை எனக்கு தெரியாதா? "..." நான் உன்னை நேசிக்கிறேன் "... " உன் இதயம் தருவாயா ? " ..." இறுதிவரை உன்னோடு வரவா ? "..." நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?... " என் துணையாய் வருவாயா ? ".......................... இனிக்க இனிக்க காதலிக்க நம்ம தமிழால் தான் முடியும் ல ...
ஓகே ஓகே பீல் பண்ணது போதும்னு நீங்க சொல்றது புரியுது...சோ நாம சுபி என்ன சொல்றாங்க பார்ப்போம்)
" அர்ஜுன் "
" சொல்லுடாமா ? "
" எனக்கு ஒரு சந்தேகம் இருக்கு அர்ஜுன் ... ரகுவை பத்தி ! "
" ரகு ஜானகி விஷயம் தானே? "
" அர்ஜுன் உங்களுக்கு ?"
" எப்பவோ தெரியும் கண்மணி "
" அப்போ ஏன் என்கிட்ட சொல்லல ? "
" உன் அண்ணனே சொல்லட்டும் நு வைட் பண்ணேன் "
" அப்போ ரகு சொல்லிட்டானா ? "
" ம்ம்ம்ம்ம்ம்ம்" என்றவன் அண்டன்தது அத்தனையும் சொல்ல ,
" வாவ் அர்ஜுன் அப்போ ஜானகி தான் எனக்கு அண்ணியா ? " என்று துள்ளி குதித்தாள்.
" ஆமாடா செல்லம் "
" எனக்கு எவ்வளோ சந்தோசம் தெரியுமா அர்ஜுன் ... நீங்க மட்டும் பக்கத்துல இருந்திருந்தா ? " என்றவள் சந்தோசத்தில் அவன் தோளில், மாலையாய் கை கோர்த்து கன்னத்தில் இதழ் பதிப்பது போல கற்பனை செய்தாள். ( சுபி நீங்க மைண்ட் வாய்ஸ் நு நெனைச்சி சத்தமா பேசிட்டிங்க ) " அட ஆமால" என்று தலையில் தட்டி கொண்டாள் சுபி .
" இருந்திருந்தா ? "
" ம்ம்ம் ஒண்ணுமில்ல "
" ஹேய் சொல்லு "
" மாட்டேன் போங்க "