(Reading time: 55 - 110 minutes)

 

ஹேய்… நந்து… எவ்வளவு நேரம் தூங்குறான் பாரு உன் அண்ணன்… அவனை எழுப்பு.. போ…”

“……”

“நந்து நான் உங்கிட்ட தான் சொல்லுறேன்…”

“………”

“அடியே… சொல்லுறது காதுல விழுகுதா இல்லையா?...

“……..”

“நந்து…” என்று சத்தமாக தன் மகளை முறைத்தாள் காவ்யா…

“என்னம்மா…”

“ஏண்டி.. எவ்வளவு நேரம் கூப்பிடுறேன்… உன்னை….”

“நீ எப்போ கூப்பிட்ட என்னை?...”

“அடிப்பாவி… என்னடி இப்படி பேசுற?...”

“பின்னே… வேற எப்படி பேசுவாங்க?... நீ பாட்டுக்கு கத்திட்டு இருந்துட்டு என்னை கூப்பிட்டேன்னு வேற பொய் சொல்லுற… இரு இரு அப்பாகிட்ட சொல்லிக் கொடுக்குறேன்…”

“கத்தினேனா?... ஆமாண்டி… நீ ஏன் சொல்லமாட்ட… நீ எல்லாம் சொல்லுவடி…”

“நான் ஒன்னும் எல்லாம் சொல்லமாட்டேன் அப்பாகிட்ட.. நீ பொய் சொன்னேன்னு மட்டும் தான் சொல்வேன்…” என்றாள் அந்த சிறுமி…

மகளின் அந்த சுட்டித்தனத்தை உள்ளுக்குள் ரசித்துக்கொண்டாள் காவ்யா…

“எனக்கு மாமியார் இல்லாத குறையே தெரியலைடி…” என்றாள் சிரிப்புடன்…

“ஓ… அதான் நான் இருக்கேன்னு சொல்லுறியா?.. அடிக்கடி…” என்று பொய் கோபத்துடன் சொல்லிவிட்டு கைகளை கட்டி காவ்யாவை முறைத்தாள் நந்து…

நந்துவின் அந்த செயல் காவ்யாவை மேலும் சிரிக்கத்தூண்டியது… அவள் மகளின் அருகே வந்து,

“அப்படி இல்லடா நந்தும்மா… நீ என்னை நல்லா பார்த்துக்குறன்னு சொல்லுறேண்டா…” என்றதும் புரியாமல் தாயை பார்த்தவள்…

“நந்தும்மா, உன் பாட்டி இருந்தா நான் எப்படி அவங்களுக்கு கொஞ்சம் பயந்து மரியாதை கொடுத்து எல்லா வேளையும் செய்வேனோ, அப்படிதான் உன்னைப் பார்த்தும் நான் செய்யுறேன்… சோ, நான் இந்த அளவு வேலை பார்க்குறதுக்கு நீ தான் காரணமுன்னு சொல்லுறேண்டா செல்லம்….”

“ஹ்ம்ம்… சரி போ… எப்படியோ ஐஸ் வச்சிட்ட… பொழைச்சுப்போ…” என்றாள் நந்து தாயைக்கட்டிக்கொண்டே…

“சரிடா… நந்து… சித்துவை எழுப்புடா… ஸ்கூலுக்கு போகனுமில்ல…”

“போம்மா… அண்ணா பாவம், நைட் பென் டென் பார்த்துட்டு தூங்க லேட் ஆயிட்டு… அவன் கொஞ்சம் தூங்கட்டுமே… உனக்கு இப்போ அவன் வந்து என்ன வேலை பார்க்கணும்?... சொல்லு நானே செய்யுறேன்… அண்ணாவ தூங்கவிடும்மா… ப்ளீஸ்…” என்றாள் அந்த பாசமிக்க தங்கை…

மகள் சொல்வதை கேட்டு அவளை முறைத்தவள், பின், “உன் அண்ணனுக்கு இப்போவே இவ்வளவு சப்போர்ட்டா?... சரிதான்… நீயும் போய் தூங்கு… அம்மா உன்னை கொஞ்ச நேரம் கழிச்சு எழுப்பி விடுறேன்…” என்றாள் புன்னகையுடனே…

“எனக்கு தூக்கம் வரலை… நான் சாகரி வீட்டுக்கு போயிட்டு வரேன்… அண்ணா எழுந்ததும் அங்கே வர சொல்லு… சரியா?...”

“ஹ்ம்ம்.. சரி சீக்கிரம் வந்துடு நந்து…”

“சரி சரி… நீ அவனை எழுப்பிடாத… மணி இப்போ 6.30 தான் ஆகுது… அண்ணா இன்னும் கொஞ்ச நேரத்துல அவனே எந்திச்சிடுவான்..” என்றபடி சாகரி வீட்டிற்குள் நுழைந்தாள் நந்து…

ன்னங்க காபி…”

“….”

“ஏங்க.. எந்திரிங்க…”

“……”

“அடம் பிடிக்காதீங்க… எந்திங்க…”

“……”

எத்தனை சொல்லியும் எழும்பாமல் இருக்கும் தன் கணவனைப் பார்த்து கோபம் கொள்ளாமல் அவனின் அருகே வந்து அவனின் பக்கத்தில் அமர்ந்தவள், வழக்கமாக அவனை எவ்வாறு எழுப்புவாளோ அவ்வாறே எழுப்ப முடிவெடுத்தாள்…

“என் செல்லம்ல… பாருங்க… காஃபி கொண்டு வந்துருக்கேன்… எந்திங்க…”

அவனிடம் லேசாக அசைவு தென்பட்டது…

“என் ராஜால்ல… என் குட்டிபையன்ல… எந்திங்க… என்று அவன் விரல் கோர்த்துகொண்டாள்…

அவன் மெல்ல நகர்ந்து அவள் மடி மீது படுத்துக்கொண்டான்…

அவனின் அந்த செய்கையில் கிளர்ந்தவள், மெல்ல அவன் தலைமுடியில் கைகளை விட்டு அளைந்தாள்…

“இப்பவாச்சும் எந்திங்க… ப்ளீஸ்…” என்றாள்…

பின் மெல்ல அவனின் நெற்றியில் முத்தமிட்டாள்…

அவளின் செய்கையில் கண்கள் திறந்தவன், “இப்படி எழுப்புன்னு உனக்கு நான் எத்தனை தடவை சொல்லியிருக்கேன்… நீ கேட்காம அடம்பிடிக்குற… அதான் நானும் அடம் பிடிக்குறேன்…”

“வரவர எனக்கு நீங்க சின்னப்பிள்ளையா?... இல்ல நம்ம பசங்க சின்னப்பிள்ளையான்னு தோணுது..”

“ஏண்டி…” என்று கேட்டவன் அவளை நெருங்கினான்…

அவனின் நெருக்கத்தில் அவளுக்கு வார்த்தைகள் வரவில்லை… இருந்தும் திக்கி திணறி பதில் சொன்னாள்..

“பின்னே… இ…ப்..ப…டி….யா…. அடம்…. பிடிப்பீங்க…?...”

அவளின் அந்த திணறல் பதில் அவனை மேலும் அவள் பக்கம் இழுக்க, அவன் முழுவதும் தன்னிலை மறந்தான்…

“கா…வ்….யா….” என்று ராகம் பாடியவன் அவளை கவனித்தான்…

ஈரம் கூட காய்ந்திடாத அவள் கூந்தலில் இருந்த பூ, அவளின் நெற்றியில் இருந்த குங்குமம், அவளின் அழகு கொஞ்சும் முகத்தில் எந்த நேரமும் இருக்கும் இடைவிடாத புன்னகை, தழைய தழைய புடவை, அனைத்திற்கும் மேல் கழுத்தில் அவன் அணிவித்த திருமாங்கல்யம்… அவள் அவனுடையவள் என்று பறைசாற்ற, அதற்கும் மேல் அவனிடத்தில் பொறுமை இல்லை… இறுக்கமாக அவளை அணைத்தான்…

“வேண்டாம்ங்க… ப்ளீஸ்…”

“என்ன வேண்டாம்…” என்றபடி அவளின் கழுத்தில் அவன் முகம் புகைக்க…

“ப்…………………….ளீ………..ஸ்….” என்றவளின் குரல் தேய்ந்தது…

வாய் விட்டே சிரித்தவன், “வேண்டாம்ன்னு நீ சொல்லுற… ஆனா… உன் குரல் வேணும்னு சொல்லுதே… செல்லம்….” என்று அவளிடத்தில் விளையாடினான்…

“உங்களை…”

“ஹ்ம்ம்… என்னை…”

“விடுங்க…” என்று திமிர, அவன் அதற்கு மேல் அவளை பேசவிடவில்லை…

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.