“தில்லுபரு ஜானே
தில்லு தீவானே…. தித்திக்குறத் தேனே…”
என்று தினேஷும், ஷ்யாமும் தங்களது இணையைப் பார்த்து பாட, அவர்கள் அங்கிருந்து ஓட முற்பட்டனர்…
“உள்ளபடி நானே உன்னை சேர்ந்தேனே… ஒட்டியிருப்பேனே…”
என்று அவர்களை மறித்து நகர விடாமல் செய்தவர்கள், அவர்களின் கைப்பிடித்து அருகில் நிற்க வைக்க… மனைவியின் அருகாமையில் அவர்கள் தடுமாறி,
“போதும் இனி பேச்சு… அனல் வீசுது மூச்சு…
ஒரு மாதிரி ஆச்சுது… ஆஜா.. ஆஜா… அடடட… ஆஜா… ஆஜா…”
என்று கையில் கோலாட்ட குச்சியை வைத்து பாட, காவ்யாவும், அனுவும் விலகி அவர்களிடமிருந்த இன்னொரு குச்சியை பிடுங்கிவிட்டு அவர்களை பார்த்து,
“தில்லுபரு ஜானே… தில்லு தீவானே…. தித்திக்குறத் தேனே…
உள்ளபடி நானே உன்னை சேர்ந்தேனே… ஒட்டியிருப்பேனே…”
என ஆடி பாட சுற்றியிருந்த மூன்று பெண்களும் சபாஷ் அண்ணி… என்று கூக்குரலிட, விடாதீங்க மாமா… என்று மூன்று வாலு ஆண்களும் சொல்ல, அங்கே ஒரு போட்டி உருவாக ஆரம்பித்தது…
அழகான அந்த பாடலின் இசைக்கேற்றவாறு காவ்யாவும் அனுவும் கோலாட்டம் ஆட, தினேஷும், ஷ்யாமும் அவர்களுக்கு கொஞ்சம் கூட சளைக்காது ஆடினர்…
“மன்னன் மாளிகையில் வாழும் மஞ்சள் வெயில்….
ஆடைக்கட்டி வந்ததென்ன மெல்ல…
கண்ணன் நீதான் என்று மீரா வந்தாள் இங்கு…
காதல் கதை ஜாடைகளில் சொல்ல…
மாலை கண் மயங்கும் வேளை மங்கை நதி…
மங்கை நதி…. பொங்கி வரும் கங்கை நதி…
வேறோ காமன் செய்த சூதோ… அச்சம் விட…
அச்சம் விட… அவனொரு பானம் விட…
புது லீலைகள் தான்… அதிகாலை வரைதான்…
அடி காதலி… கண்மணி… ஆஜா… ஆஜா… கையணைக்க ஆஜா… ஆஜா…”
என்று ஷ்யாமும் தினேஷும் கண்ணடித்து அழைக்க, காவ்யாவும், அனுவும் உதை விழும் என்ற பாவனையில் விரல் உயர்த்தி காட்டிவிட்டு,
“உன்னால் தூக்கம் கெட்டு வாடும் தென்னஞ்சிட்டு…
கூடு விட்டு உன்னைத்தொட்டு கொஞ்சும்…
சொன்னால் போதுமடி… வாம்மா நானும் ரெடி…
காதல் செய்ய காத்திருக்கு நெஞ்சம்…
வாங்கி தோளிரண்டில் தாங்கி சொல்லிக்கொடு…
சொல்லிக்கொடு… பாடங்களை அள்ளிக்கொடு…
ஏக்கம் என்னையும்தான் தாக்கும்… முத்தமிட்டு….
முத்தமிட்டு… கட்டிக்கொள்ளு கட்டிலிட்டு…
சிறு நூலிடை தான்… ஒரு இன்பக்கடை தான்…
உந்தன் தேவையை வாங்கிட… ஆஜா… ஆஜா… என்ன வேணும்… ஆஜா… ஆஜா…”
என்று அவர்கள் கொஞ்சி கூப்பிட, ஆண்களுக்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை… சந்தோஷத்துடன் ஆட்டத்தைத் தொடர்ந்த போது, சுற்றியிருந்த 6 பேரும் ஆஹா, ஓஹோ என்றவாறு ஓடி வந்து அவர்களுடன் இணைந்து கடைசி நேர இசைக்கு தகுந்தபடி வேகமாக சுற்றி சுற்றி கோலாட்டம் ஆட, சித்து, நந்து அபி கூட அவர்களுக்கு தெரிந்த வரை ஆடினர்… ஆதியும் ரிகாவும் மட்டும் எழவில்லை… வீட்டுப்பெரியவர்களுடன் சேர்ந்து கை மட்டும் தட்டியபடி இருந்தனர் மகிழ்ச்சியாக…
சூப்பர்… அக்காஸ்… சூப்பர் மாமாஸ்… கலக்கிட்டீங்க… செம…செம… என்ற முகிலன்… நீங்க தூள் கிளப்பின மாதிரி நாங்களும் செய்ய வேண்டாமா?... அதனால என்ற முகிலன்… யார் அங்கே… பாட்டைப் போடுங்க… என்று சொல்ல… பாடல் ஒலிபரப்பானது…
“நட்ட நடு ராத்திரியைப் பட்ட பகல் ஆக்கிவிட்டாய்…
என் விழியில் நீ நுழைந்து என் தூக்கத்தையும் போக்கிவிட்டாய்…
கொட்ட கொட்ட நான் முழித்து கிட்டத்தட்ட தூங்கி விட்டேன்…
என் கனவில் நீ நுழைந்து எனை மீண்டும் மீண்டும் எழுப்பி விட்டாய்…
கிட்ட கிட்ட நீயும் வர கெட்ட கெட்ட சொப்பனங்கள் என்னை சுட்டு பொசுக்குதடா…
பற்றிக்கொண்ட என் மனசு… எண்ணெய் ஊற்றும் உன் வயசு…
தீப்பிடித்து எரியுதடா…” - மைத்ரி
“யாரிந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே..
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே…
என்னைப் பார்க்கிறாள்… ஏதோ… கேட்கிறாள்…
எங்கும் இருக்கிறாள்… ஓ….
கண்ணால் சிரிக்கிறாள்… முன்னால் நடக்கிறாள்…
நெஞ்சை கிழிக்கிறாள்…… ஓ
கூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தாள்… தோட்டத்தில் மலர்ந்த பூவாக தெரிந்தாள்….
என்னை ஏதோ செய்தாள்… - ஹரீஷ்…
“கண்ணன் வரும் வேளையில்… அந்தி மாலையில்… நான் காத்திருந்தேன்…
சின்ன சின்ன தயக்கம்… செல்ல மயக்கம்… அதை ஏற்று நின்றேன்…
கட்டுக்கடங்கா எண்ண அலைகள்… இறக்கை விரிக்கும் இரண்டு விழிகள்…
கூடு பாயும் குறும்புக்காரன் அவனே…” – மயூரி
“அன்பே அன்பே கொல்லாதே…
கண்ணே… கண்ணைக் கிள்ளாதே…
பெண்ணே… புன்னகையில் இதயத்தை வெடிக்காதே…
அய்யோ… உன் அசைவில் உயிரை குடிக்காதே…” - முகிலன்…..
“நெஞ்சுக்குள்ள நெஞ்சுக்குள்ள… வச்சிருக்கேன்… ஆச…
அட உச்சந்தலை உள்ளுக்குள்ள ஏதேதோ பேச…
எனக்காக வந்தவனே… இளநெஞ்சில் நின்றாயே…
உசிர் கூட துச்சமுன்னு சொல்லாமல் சொன்னாயே…
என் நெத்தி முடி மேல நீ கொத்தி விளையாட…
ஒரு நேரம் காலம் வந்துருச்சு… இன்னும் என்ன ஜாட…” – ஷன்வி….
“ஆத்தாடி தலை காலு புரியாம…
பார்த்தேனே உன்னை நானும் தயங்காம…
காத்தோடு காத்தாக கைகோர்த்து நடப்பேனே விலகாம…
ராமனுக்கு சீதை… கண்ணனுக்கு ராதை…
அடியே மாமனுக்கு ஜோடி நீயடி…” – அவ்னீஷ்….
அதன் பின் எல்லோரும் சேர்ந்து ஆட, அப்போதும் ஆதியும் ரிகாவும் எழுந்து கொள்ளவில்லை… கைத்தட்டி உற்சாகப்படுத்துவதோடு சரி… மேற்கொண்டு எதனையும் செய்யவில்லை… அவர்கள் இருவரும்…