(Reading time: 32 - 64 minutes)

"ரெண்டு நாளாச்சு யுக்தா... நானே வீட்டுக்கு வரனும்னு இருந்தேன்... ரொம்ப ஸாரி யுக்தா... அம்மா இப்படி பேசுவாங்கன்னு எதிர்பார்க்கல... அத்தை மாமாவை பார்த்து கூட ஸாரி கேக்கனும்... ஃப்ரியா இருக்கும்போது வீட்டுக்கு வரேன்..."

"விடு தேவா... அத்தை ஏதோ கோபத்துல பேசிட்டாங்க.... நான் அதை அப்பவே மறந்துட்டேன்... இன்னும் சொல்லனும்னா நான் தான் உன்கிட்ட ஸாரி கேக்கனும்... அத்தனை பேர் முன்னாடி உன்னை ஹர்ட் பண்றா மாதிரி நடந்துக்கிட்டேன்..."

"என்ன யுக்தா... உன்னோட விருப்பத்தை தானே சொன்ன... இதுல என்ன தப்பிருக்கு... விடு அதை நான் பெருசா எடுத்துக்கல..."

"இல்லை தேவா... என்னோட விருப்பத்தை சொல்றதுக்கும் ஒரு முறை இருக்கு... எனக்கு மட்டும் அந்த விஷயம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா... அத்தை கேட்டதும் வேற மாதிரி சமாளிச்சிருப்பேன்... அதுவரைக்கும் யாரும் என்கிட்ட அந்த விஷயத்தை சொன்னதில்லையா.... அதான் நானும் என்ன பேசறதுன்னு தெரியாம பேசிட்டேன்.. ஸாரி தேவா..."

அதற்குள் பிருத்வி இருவருக்குமான ஜூஸோடு அங்கு வந்தான்...

"தேவா இது பிருத்வி... வளர்மதி அத்தை தெரியுமா...?? அவங்க சன் தான் இவர்..

"பிருத்வி இது தேவா... லஷ்மி அத்தையோட சன்..." இருவரும் கைகுலுக்கி கொண்டனர்.

"யுக்தா தேவாக்கும் ஜூஸ் வாங்கிட்டு வந்துடுறேன்.."

"அய்யோ இல்லை பிருத்வி எனக்கு எதுவும் வேண்டாம்... நான் ஒருத்தரை பார்க்க தான் வந்தேன்... அவர் எப்ப வேணாலும் வந்துடுவார்..."

"இருக்கட்டும் தேவா... பிருத்வி ஜூஸ் வாங்க டைம் ஆயிடும்... ஒரு யூஸ் அண்ட் த்ரோ கிளாஸ் வாங்கிட்டு வாங்க தேவாவும் நானும் ஷேர் பண்ணிக்கிறோம்..." யுக்தா சொன்னதும் கிளாஸ் வாங்க பிருத்வி சென்றுவிட்டான்..

"தேவா இந்த விஷயத்தை எவ்வளவு ஸ்போட்டிவா நீ எடுத்துக்கிட்ட... கவி இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கலன்னு என்கிட்ட கோபப்பட்டா தெரியுமா...?? ரெண்டுநாளா என்கிட்ட பேசலை.."

சங்கவி தன்னிடம் யுக்தாவின் காதலைப் பற்றி கூறியதை யுக்தாவிடம் கூறவில்லை தேவா... எதுவும் தெரியாதது போல் இருந்தான்..

"சிஸ்டர்ஸ் ரெண்டுபேரும் பேசிக்கலையா...!! ஆச்சர்யமா இருக்கே...!!"

"ஆமா இந்த சிஸ்டரை விட கவிக்கு தேவாவோட ஃப்ரண்ட்ஷிப் தானே பெருசா தெரியுது.. அப்படி என்ன மந்திரம் பண்ண அவளுக்கு..."

"அம்மா ஆளை விடுங்க... உங்க ரெண்டுபேர் சண்டையில என்ன இழுக்காதீங்க..." இருவரும் சிரித்தார்கள்..

அதற்குள் பிருத்வியும் வந்தான்.. பிறகு மூவரும் பேசிக்கொண்டே ஜூஸ் குடித்து முடித்தனர்... தேவா சந்திக்க வேண்டிய ஆளும் வந்துக்கொண்டிருக்கிறார் என ஃபோன் வரவே அவர்களிடமிருந்து விடைப்பெற்றான்... அப்போது யுக்தா அவனிடம்...

"தேவா உண்மையிலேயே நான் அன்னைக்கு அப்படி பேசினதுல உனக்கு கஷ்டமில்லையே..."

"அப்படியெல்லாம் இல்லை யுக்தா..."

"தேவா நான் பிருத்வியை தான் காதலிக்கிறேன்... அத அன்னைக்கு வெளிய சொல்ல முடியல... அதான் உன்னை ஹர்ட் பண்ண வேண்டியதா போச்சு... ஸாரி தேவா..."

"எத்தனை தடவை ஸாரி கேப்ப யுக்தா... அத விடு.. ரெண்டுப்பேருக்கும் கங்கிராட்ஸ் உங்க லவ் சக்ஸஸ் ஆக என்று இருவருக்கும் கைகுலுக்கினான்...

பிருத்வியும் சிரித்துக் கொண்டு கைகுலுக்கினான்... தேவா போனப்பிறகு....

"யுக்தா... தேவாவைப் பார்த்தா.. வில்லனா தெரியலையே..."

"வில்லனா..??"

"ஆமா கட்டுனா யுக்தாவை தான் கட்டுவேன்னு.. தேவா மல்லுக்கு நிக்கற மாதிரி தெரியலையே... அப்புறம் ஏன் அப்படி சொன்ன..??"

"அத்தை தேவாக்கிட்ட என்னைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு சொல்லியிருக்காங்க... அதனால தேவா மனசுல அந்த ஆசை இருந்திருந்தா...

உங்களுக்கு தெரியாது பிருத்வி... நம்ம மனசுல நினைச்சது நடக்கலைன்னா எவ்வளவு கஷ்டமா இருக்கும் தெரியுமா..?? ஒருவேளை தேவா மனசுல அப்படி ஒரு எண்ணம் இருந்தா... என்னால ஒன்னும் செய்ய முடியாதுதான்...

ஆனா நான் இப்போ கல்யாணம் பண்ணிக்க போறதில்லை அதனாலத்தான் தேவாவை வேண்டாம்ன்னு சொன்னேன்... அதை தப்பா புரிஞ்சிக்கிட்டு... ஒருவேளை யுக்தா கல்யாணம் பண்ண முடிவெடுத்தா... நம்மல கல்யாணம் பண்ணிப்பாளோன்னு தேவா நினைச்சிடக்கூடாது... அதான் அப்படி சொன்னேன்..

அதுமட்டுமில்ல... நான் சொன்னது உண்மை தானே..."

"யுக்தா..ஆ..ஆ..!!"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.