இப்பொழுது புன்னகைத்தது இன்பா……” சொன்னேன்லமா…..சரின்னு சொல்லுங்க….”
“சரிம்மா…போய் ட்ரெஸ் மாத்திட்டு வா….எல்லோரும் வெயிட் பண்றாங்க பாரு….” என தன் சம்மதத்தை சொன்னது களஞ்சியம் தான்.
இவள் உள்ளறைப் பர்த்து நடக்க தொடங்க…. இவள் பின்னோடு நித்யாவும் திரவியாவும்….” நீ பொறுக்கின்னு அண்ணாவைப் பார்த்து இதுக்குதான் அவ்ளவு ஃபாஸ்ட்டா சொன்னியா மனோ….” இது வேற யாரு …..திரவியாதான்…..
“அச்சோ இதுக்கு அவன்ட்ட சாரி கேட்கனும்னு நினச்சோம்ல….கேட்கவே இல்லை….மறக்காம ஒரு நாள் கேட்கனும்….” என மனோ மனம் ஓட…
நித்யாவோ “ சரி சரி பழசையே நினச்சுட்டு இருந்தா புது சீன்லாம் கிடைக்காது….சீக்கிரமா சேரி கட்டிட்டு வந்தாதான் இன்னைக்கு எங்கேஜ்மென்ட்….” இவளை அனுப்பி வைக்க அடுத்து நிச்சய பட்டாக இவளிடம் கொடுக்கப் பட்டிருந்த பட்டை எடுத்துப் பார்த்தாள்…
க்ரீம் நிற உடல்….அடியில் ஒரு சாண் அகல சரிகை பார்டர்….அடுத்து ஒரு சாண் அகல இளம் லாவண்டரும் ப்ளூவுமாய் ஒரு நிறம்….அடுத்து அரை சாண் அகல டார்க் பிங்க்….அதில் பச்சை நிற கொடியும் பூவும் பிங்க் நிற மளவே பச்சை நிறமும் தெரியுமளவு….அடுத்து ஒரு சாண் அளவு மயில் கழுத்து நிறம்…. க்ரீம் நிறம் முழுவது டிஸ்யூ பேட்டன் ஜரி வேலைப்பாடு….
எடுத்து அவளுக்கு தெரிந்த அளவு உடுத்தினாள்……’இதெல்லாம் இவள் போய் செலக்ட் செய்யலை…..பட் அவன் எப்டி இவ்ளவு தூரம் இவள் டேஸ்ட் அறிந்து செய்தான்….?’
வெளியில் வந்தவளுக்கு புடவைக்கு கொசுவம் மடிப்பெல்லாம் ஒழுங்காக்கி…. ஏற்கனவே அணிந்திருந்த நகையோடு, நிச்சய நகையாய் வந்திருந்த அந்த நெக்லஸையும் அணிவித்து…..மும்பையில் அவன் கூட போய் இவள் வாங்கியதுதான்…..மீண்டுமாய் மேடைக்கு கூட்டிப் போனது நித்துவும் திரவியாவும்….
இப்பொழுது மேடையில் அவன் இருந்தான்….”ஹை ஜாலி மனோ உன்னை இப்ப அண்ணா பக்கத்துல உட்கார வச்சிடுவாங்க….அமோகமா சைட் அடிக்கலாம்” இவளுக்கும் அருகிலிருக்கும் மித்ரனுக்கும் நிச்சயமாய் கேட்கும் அளவு சத்தத்தில் சொல்லி அவன் அருகில் அமர வைத்தாள் நித்யா இவளை.
இவளுக்கு சிரிப்பும்…கூடவே வெட்கமும் வர….அவன் கேட்டுட்டு இருக்கானே….வெட்கம் வருதே…. உதடு கடித்து வரும் வெட்கத்தை ஊரார் கண்ணுக்கு மறைக்க தலை குனிந்து கொண்டாள் மனோ.
ஓரக்கண்ணில் அவன் சிரிக்கும் இதழ்கள் இவளுக்கு தெரிகிறது…
“திரவியா சிஸ்…நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய முக்கியமான விஷயம்…எதுக்காக மேடையில இருக்கப்ப தலைய குனிஞ்சுக்கனும் தெரியுமா….அப்பதான் யாரைப் பத்தியும் கவலைப் படாமா பப்ளிக்கா நம்ம மனோ மாதிரி ஓரக் கண்ணால பக்கத்துல உட்கார்ந்திருக்கவங்களை கபளீரம் பண்ணலாம்….நாளைக்கு உங்களுக்கு இந்த டிப்ஸ் தேவைப்படும் அதான் சொல்லி வைக்கிறேன்…” நித்யா இப்போது திரவியாவையும் சேர்த்து வாரிக் கொண்டிருந்தாள்….
அப்போதுதான் மித்ரன் அருகில் வந்திருந்த அகதன் காதிலும் இது விழுகிறதுதானே…..அவன் திரவியாவைப் பார்த்து சின்னதாய் சிரித்துக் கொள்ள….நித்யா ஒரு ‘ஆஹான்’ சொல்ல வெட்கப் படுவது இப்போது திரவியாவின் முறை….
இப்பொழுது மித்ரனுக்கு அகதனும் இவளது அப்பாவும் சேர்ந்து மாலை அணிவிக்க….மனோவுக்கு மித்ரனின் அம்மா மற்றும் இன்பா அதை செய்ய…..அடுத்து மடமடவென நிகழ்தேறுகிறது விழா….
மோதிரம் மாற்றும் போது எதிரில் நின்று இவள் விரலைப் பிடித்துக் கொண்டு இவள் முகத்தைப் பார்க்கிறான் அவன்….இவள் அவனைப் பார்க்க வேண்டும் என எதிர்பார்க்கிறான் என தெரிகிறதுதான்….ஒரு புறம் ‘போடா….இன்னும் உன் மண்டைய நான் உடைக்கல… அதுக்குள்ளலாம் நோ சமாதான உடன்படிக்கை’ என்று இருந்தாலும் மறுபுறம் ‘இந்த டே இன்னொரு டைம் திரும்பி வராது….சோ பிரவாயில்லை பார்த்து வைக்கலாம்…..மண்டய உடைக்கதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்….அதை நாளை கவனிச்சுகலாம்’ என்றும் இருக்கிறது.
மெல்ல நிமிர்ந்து அவனை முகத்தோடு முகமாய்ப் பார்த்தாள். அவன் கண்ணில் இன்னுமாய் கூடும் அந்த சந்தோஷம்…..அடி வயிறிலிருந்து அடி மனம் வரை வந்து பாயும் முழு நிறைவும் பிறை வகை பெண்மையில் குறை இன்றி கூத்தாடும் காதல் தவிப்புமாய்… பின்னமாய் இவள் பிரிவு பட்டாள்…..
இப்போது அவன் விரல் பிடித்து இவள் தன் வலக்கையால் மோதிரம் போட்டுவிட…. அவளது இடக்கையை பிடித்து வைத்துக் கொண்டான் அவன். மேடையில் நின்று கொண்டு இப்பொழுது இவள் என்ன செய்து விட முடியும்….? கையை உதறினால் கூட நல்லா இருக்காதே…..நேருக்கு நேரா முறச்சா கூட சரி கிடையாது…
இயல்பாய் அவன் புறம் நிற்பது போல் நின்று கொண்டாள்…. இவள் கயைப் பற்றியபடி அவனும் நின்று கொண்டான்.
அவனுக்கு மட்டும் புரியும் வகையில் மெல்ல கையை உருவ முயன்றாள்…