"அய்யயோ என்னங்க இவன் திடீர்னு ஏதோ பேயடிச்ச மாதிரி உக்காந்து இருக்கான் " என்ற அபிராமியிடம்,
"ஐயோ அத்தை, அவரை பேய் அடிக்கல ... ஐ தின்க் உங்களுக்கு போரடிக்காம இருக்க மூணாவது மருமக ரெடினு" என்றாள் சித்ரா.
அபிராமியும் கந்தசாமியும் ஆச்சர்யமாக மதியை பார்த்தனர். விஜய் அருகே சென்று மதியை உலுக்க , அப்போது தான் கனவுலகத்தில் இருந்து மீண்டு வந்தவன் திரு திருவென அனைவரையும் பார்க்க, எல்லாரும் அவனை நமட்டு சிரிப்புடன் பார்த்தனர். தன கைகளில் இருந்த போட்டோவை தேட அது இப்போது அவன் அண்ணி அஸ்வினியின் கையில் இருக்க, "என்ன தம்பி தேடரிங்க" என்றாள்.
"இல்லை அண்ணி அது,, அது.. "என திணற
"போட்டோவா?" என சித்ரா கேட்க, அங்கே சிறிது நேரம் கிண்டலும் கலாட்டாவுமாக கழிய, கந்தசாமிதான் பேச்சை தொடங்கினார்.
"மதி உனக்கு இந்த பொண்ண பிடிச்சிருக்குன்னு நெனைக்கிறேன். இருந்தாலும் அதை உன் வாயால சொல்லிட்டினா கொஞ்சம் சந்தோசமா இருக்கும். " என்றார்.
தன காதலை அவன் முழுமையாக உணர்ந்தது இன்று தான் என்று தெரியாது எல்லோரும் அவனை ஆர்வமாக பார்க்க, சற்றே வெட்கத்துடன் "ஹ்ம்ம் பிடிச்சிருக்கு பா. "என்றான்.
"ரொம்ப சந்தோஷம் தம்பி " என்று அவன் அன்னை அவனை கட்டிக்கொள்ள அங்கே அனைவருடைய முகத்திலும் சந்தோஷம் நிறைந்தது.
"பொண்ணு பேரு மதுமதி"
என்னவள் பெயர் மது மதி ...அவள் எனக்காகவே பிறந்தவள்... பிறந்ததில் இருந்து இன்று வரை என் பெயரை தாங்கி நடப்பவள் என்ற கர்வம் அவனில் நிறைந்தது.
"சண்முகம் & கோ, சிவசண்முகம் இருக்காரு இல்லையா.. அவரோட ஒரே பொண்ணு.இன்ஜினியரிங் படிச்சிட்டு ஆசைக்காக பெங்களூர்ல வேலை செய்யுது. இப்போ ஒரு மாசமாத்தான் . நல்ல குடும்பம், எனக்கே நல்ல பழக்கம் தான். பொண்ணும் ரொம்ப நல்ல டைப் அப்படின்னு தரகர் சொன்னாரு. பாக்கவும் நல்ல அழகா லட்சணமா நம்ம மதிக்கு ஏத்த பொண்ணா இருக்கு."
"அது மட்டுமா பெரு கூட மது மதின்னு சூப்பர் மேட்சா இருக்கு" என்றார் விஜய்.
"ஆனா அதுல ஒரு சின்ன பிரச்சனை " என்றார் கந்தசாமி.
மதி பதட்டத்துடன் அவரை பார்க்க," இல்லை பொண்ணுக்கு ஒரு வருஷம் வேலைக்கு போகனுமாம். அதனால கல்யாணம் எப்படியும் தைல தான் பண்ண முடியும். இப்போ தான் வைகாசியே பொறந்துருக்கு. " என்றார்.
நிம்மதி பெருமூச்சு விட்ட மதி அவசர அவசரமாக "அதானல என்னப்பா பரவால "என்க, எல்லோரும் வாய் விட்டு சிரித்தனர் .
இந்த சந்தோசத்தோடு தரகரிடம் விபரத்தை சொல்ல கந்தசாமி சென்று விட, மதி யாருமறியாமல் அந்த போட்டோவை எடுத்து கொண்டு தன் அறைக்கு வந்து கதவை அடைத்து மெத்தையில் படுத்தவன், "என் மது, இத்தனை நாளா என்னை காக்க வெச்சதுக்கு உனக்கு நான் பெரிய தண்டனையா ரெடி பண்ணி வெக்கறேன். இந்த முட்டகண்ணு ரெண்டும் அப்படியே என்னை கவுக்க பாக்குது.. உன் மேல இருக்குற காதல் எனக்கே இப்போதான புரிஞ்சுது..என்னை உனக்கு தெரியுமா ... இங்க ஒருத்தன் பைத்தியகாரனா தனியா பேசிட்டு இருக்கறது உனக்கு தெரியுமாடி” என்று சிறிது நேரம் புலம்பியவன் அந்த புகைப்படத்தை தன மார்போடு தழுவிக்கொண்டுமெல்லிய குரலில் பாடினான்.
“என் மேல் விழுந்த மழை துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
இன்று எழுதிய என் கவியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
என்னை எழுப்பிய பூங்காற்றே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
என்னை மயக்கிய மெல்லிசையே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்?
என்று பாடிகொண்டே தன கையிலிருந்த புகைப்படத்தை எடுத்து அதிலிருந்த மதுவின் கன்னத்தில் மென்மையாக இதழ் பதித்தான்.
அதே நேரம் சிலீரென்று தன் கன்னம் தொட்டு சென்ற தென்றலில் உடல் சிலிர்த்து தன்னை மறந்து பாடினாள் மது
"உடம்பில் உறைகின்ற ஓர் உயிர் போல்
உனக்குள் தானே நான் இருந்தேன்..."
இந்த காதல் என்பது தன்னுடைய துணையை தேடி, கொண்டு வந்து சேர்க்கும் சக்தி கொண்டது ...இதோ இங்கே மது, மதியின் பாடலின் தொடர்ச்சியை பாடியது எதேச்சையானது அல்ல ... அது நிச்சயிக்கப்பட்ட ஒரு பந்தத்தின் தொடக்கமே.... இந்த காதல் தன்னுடைய சக்தியை கொண்டு விதியை தோற்கடித்து மதுவையும் மதியையும் இணைக்குமா? ... பொறுத்திருந்து பார்ப்போம்...
தொடரும்!
{kunena_discuss:945}