“என்னாச்சு மாமா? அக்கா நல்லாதானே இருந்தா?”
“எல்லாம் அந்த வசீகரன்தாம்மா காரணம். கர்ப்பிணி பெண்ணுன்னு கூட பார்க்காம மிருகத்தனமா நடந்துக்கிட்டானாம். இவ சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவங்க போய் சேர்றதுக்குள்ள நிலைமை கை மீறிடுச்சு. அவங்கதான் இவளை மருத்துவமனையில் சேர்த்திருக்காங்க. போலீசிடமும் புகார் பண்ணியிருக்காங்க. இப்ப அவன் ஜெயில்ல.”
ஜெயிலில் இருந்த வசீகரனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
சூர்யாதான் தனது கடைசி விருப்பமாக அவனுடன் வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டாள். குழந்தைக்கு ஏதும் ஆகிவிட்டால் தனது திட்டம் பலிக்காதே என்று தயங்கினான். ஆனால் இனி அவனது வாழ்க்கையில் தனக்கு இடமில்லை என்பதால் தனது கடைசி விருப்பத்தை நிறைவேற்ற கெஞ்சினாள
...
This story is now available on Chillzee KiMo.
...
ட கொடுத்துடாதீங்க.”
இதுதான் அவள் அவனிடம் கடைசியாக பேசியது.
அவனும் அவள் விருப்பத்தை நிறைவேற்றினான். அவளது பெற்றோரிடம் குழந்தையை கொடுக்க மறுத்துவிட்டான். ஆனால் அவளை ஆசிரமத்தில் சேர்க்காமல் தானே தந்தையாய் வளர்க்க ஆரம்பித்தான். ஊர் உலகத்தைப் பொறுத்த வரையில் அவள் அவனது குழந்தைதானே.